Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அது ஏலியன் விமானம்தான்.. நம்மை நோட்டமிட வந்தது.. மர்மம் விலக தொடங்கும் ஒமுவாமுவா!

கடந்த 2017ம் வருடம் பூமிக்கு அருகில் வந்த சிகரெட் போன்ற வித்தியாசமான சாதனம் கண்டிப்பாக ஏலியன் வாகனம்தான் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அது ஏலியன் விமானம்தான்.. நம்மை நோட்டமிட வந்தது- வீடியோ

    நியூயார்க்: கடந்த 2017ம் வருடம் பூமிக்கு அருகில் வந்த சிகரெட் போன்ற வித்தியாசமான சாதனம் கண்டிப்பாக ஏலியன் வாகனம்தான் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

    கடந்த 2017ம் வருடம் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் பூமிக்கு அருகில் வித்தியாசமான விண்கல் ஒன்று வந்தது. பார்ப்பதற்கு சிகரெட் வடிவில் இருக்கும் இந்த விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.

    உலகிலேயே முதல் முறையாக பூமிக்கு சொந்தம் இல்லாமல் வானத்தில் பறந்த முதல் பொருள் இதுதான். இது மற்ற கற்களை போலவோ எரிநட்சத்திரம் போலவோ இல்லாமல் பறக்கும் பொருள் போல இருந்தது.

     என்ன பிரச்சனை இதில்

    என்ன பிரச்சனை இதில்

    இதில் என்ன பிரச்சனை என்றால் இது விண்கல்லா, எரி நட்சத்திரமா, இல்லை வேறு எதுவுமா என்று தெரியாமல் விஞ்ஞானிகள் குழம்பிக் கொண்டு இருக்கிறார்கள். இதன் வடிவத்தை வைத்து எதையும் தீர்மானிக்க முடியவில்லை. அதே சமயம் இதில் இருந்து சிறிய சிறிய சிக்னல்களும் வந்து கொண்டு இருந்தது.

     என்ன பெயர்

    என்ன பெயர்

    இது பூமியை மிக நெருக்கமாக கடந்த மிக வித்தியாசமான பொருள் ஆகும். இதனால் உடனே இந்த விண்கலத்திற்கு பெயர் சூட்டப்பட்டது. அதன்படி இதை கண்டுபிடித்தவர்கள் இதற்கு 'ஒமுவாமுவா' என்று பெயர் வைத்தார்கள். இதன் அர்த்தம் ''வெளி உலகில் இருந்து வந்த தூதுவன்'' என்பதாகும்.

     என்ன செய்தது

    என்ன செய்தது

    இது பூமிக்கு மிக அருகில் வந்துவிட்டு சென்றது. அதன்பின் சூரியனை நோக்கி சென்றுவிட்டு, பின் சூரியனை கடந்து வேறு வழியாக சென்றுவிட்டது. இது எந்த கிரகம் மற்றும் நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையிலும் சிக்காமல் மிக நேர்த்தியாக அனைத்தையும் கடந்து மிக மெதுவாக சென்றது. தற்போது இது எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது.

     ஆராய்ச்சி செய்தனர்

    ஆராய்ச்சி செய்தனர்

    இது பூமியை கடந்து சென்ற வித்தியாசமான சாதனம் என்பதால் இது குறித்து ஆராய ரஷ்ய தொழிலதிபர் ஒருவர் 650 கோடி ரூபாய் பணம் கொடுத்தார். ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் 'யூரி மில்னர்' 650 கோடி ரூபாய் பணம் கொடுத்து ஆராய்ச்சி நடத்தி வருகிறார். இதை வைத்து ரஷ்யா மட்டுமில்லாமல் மற்ற நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள்.

     என்ன ஆராய்ச்சி

    என்ன ஆராய்ச்சி

    இதில் ஏலியன்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதை கண்டுபிடிப்பதற்காக இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. இது விண்கல்லா, இல்லை ஏலியன் அனுப்பியதா, இல்லை வேறு ஒரு ஏலியன் விமானத்தின் சிதறிய பாகமா என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் இந்த ஆராய்ச்சிகளில் ஹார்வேர்ட் நடத்திய ஆராய்ச்சி ஒன்றில் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

     ஹார்வேர்ட் பல்கலைக்கழகம்

    ஹார்வேர்ட் பல்கலைக்கழகம்

    ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஷுமேல் பெய்லி தலைமையில் நடந்த ஆராய்ச்சியில் கூறப்பட்டதாவது, இந்த சாதனம் கண்டிப்பாக ஏலியன் விமானம்தான். 95 சதவிகிதம் இது ஏலியன் விமானம்தான். இதை உலகம் ஏற்றுக்கொள்ளும் நாள் விரைவில் வரும். ஆனால் இது ஏன் பூமியை நோக்கி வந்தது என்பதைத்தான் விரைவில் நாம் கண்டுபிடிக்க வேண்டும்.

     காரணம் என்ன

    காரணம் என்ன

    இது சூரியனுக்கு அருகில் சென்றுள்ளது, பூமிக்கு அருகில் வந்துள்ளது. ஆனால் அதை ஈர்ப்பு விசை பாதிக்கவில்லை. இதன் அர்த்தம் இதை யாரோ செயற்கையாக ஈர்ப்பு விசைக்கு எதிராக இயக்கி இருக்கிறார்கள் என்பதுதான். அதனால் இதை இன்னும் ஆராய்ச்சி செய்ய வேண்டும், என்று கூறி உள்ளனர். இவர்களின் இந்த பேட்டி இணைய உலகில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+