ரூ. 4.9 கோடிக்கு ஏலம்.. புதிய சாதனை படைத்தது இளவரசி டயானாவின் ‘பழைய’ ஊதா நிற கவுன்!
நியூயார்க் ஏலத்தில் இளவரசி டயானாவின் ஆடை ஒன்று ரூ.4.9 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நியூயார்க்: மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் ஆடை ஒன்று, இந்திய மதிப்பில் சுமார் 4.9 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய இங்கிலாந்து மன்னர் சார்லஸின் முதல் மனைவியான டயானா, அழகிற்கு மட்டுமல்ல, அணியும் ஆடைகளாலும் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்டவர். ஒவ்வொரு முறையும் அவர் அணியும் ஆடைகளை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர் வட்டம் அவருக்கு உண்டு. சார்லஸைப் பிரிந்த பிறகும்கூட, அவர் பிரபலமானவராகவே வாழ்ந்தார்.
டயானா இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டபோதும்கூட, இன்னமும் அவரது உடைகளுக்கு ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால்தான், 1997ம் ஆண்டு டயானா அணிந்த கவுன் ஒன்று தற்போது அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

ஊதா நிற கவுன்
பிரிட்டிஷ் ஆடை வடிவமைப்பாளரான விக்டர் எடெல்ஸ்டீன் வடிவமைத்த இந்த கவுனானது ஊதா நிறத்திலானது. டயானாவுக்கென பிரத்யேகமாக இந்தக் கவுனை விக்டர் வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது. 1991 இல் இளவரசி மார்கரெட்டின் கணவர் லார்ட் ஸ்னோடனால் எடுக்கப்பட்ட அரச உருவப்படத்திலும், 1997 ஆம் ஆண்டு புகழ்பெற்ற வேனிட்டி ஃபேர் போட்டோஷூட்டிலும் டயானா இந்தக் கவுனை அணிந்திருந்தார்.

ஏலத்தில் விற்பனை
சார்லஸைப் பிரிந்த பிறகு, 1997ம் ஆண்டு எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்காக டயானா தனது 80 ஆடைகளை விற்பனை செய்தார். அதன் பிறகு இப்போதுதான் அவரது ஆடை ஒன்று ஏலத்தில் விற்பனைக்கு வந்தது. எனவே இந்தக் கவுனை எடுப்பதற்கு அதிக போட்டோ போட்டி காணப்பட்டது.

சாத்பைஸ் நிறுவனம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற கலைப்பொருட்கள் சேகரிப்பு மற்றும் ஏல நிறுவனமான 'சாத்பைஸ்' நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது. அதில், டயானாவின் இந்த கவுன் 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் 4.9 கோடி ரூபாய் ஆகும்.

புதிய சாதனை
இதன்மூலம், இது நடைபெற்ற அவரது ஆடைகளின் ஏலங்களில் அதிக விலைக்கு விற்பனையான ஆடை என்ற பெருமையை டயானாவின் இந்த கவுன் பெற்றுள்ளது. இந்த கவுனானது 80 ஆயிரத்தில் இருந்து 1.2 லட்சம் டாலர் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதை விட 5 மடங்கு அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளதாக சாத்பைஸ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications