மனிதர்களால் நடந்த மிகப்பெரிய தவறு! காலநிலை மாற்றத்தால் ஏற்பட போகும் பேரழிவு! எச்சரிக்கை
நியூயார்க்: மனிதர்களின் நடவடிக்கை காரணமாக ஏற்படும் காலநிலை மாற்றமானது, பூமியின் சுழற்சியை பாதிக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது இப்படியே தொடர்ந்தால், விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த பிரபஞ்சத்தில் உயிர்கள் வாழக்கூடிய ஒரே ஒரு கிரகமாக பூமி இருக்கிறது. பிரபஞ்சத்தில் வெவ்வேறு சூரிய குடும்பங்களில் உயிர்கள் வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கும் கிரகங்களாக சில அடையாளம் காணப்பட்டாலும் கூட, அங்கு இதுவரை எந்த உயிர்களையும் நாம் கண்டுபிடிக்கவில்லை. இப்படி இருக்கையில் வாழ வைக்கும் பூமியை சரியாக பார்த்துக்கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பு. ஆனால், மனித நடவடிக்கைகள் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், இது பூமியின் சுழற்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. தன்னை தானே சுற்றும்போது பூமியில் வளிமண்டலங்கள் ஆக்டிவாக இருக்கின்றன. மழைப்பொழிவு, காற்றின் சுழற்சி உள்ளிட்டவை சீராக இருக்கிறது. மிக முக்கியமாக சூரிய ஒளி ஒரே இடத்தில் படாமல் இந்த சுழற்சி பாதுகாக்கிறது. ஒருவேளை இது சுழலாமல் இருந்தால் பூமி ஒரு பக்கம் வெளிச்சமாகவும், மறுபக்கம் இருளாகவும் இருக்கும். இதானல் சூரியனிலிருந்து வெளி வரும் புற ஊதாக்கதிர்கள் பூமியின் வெளிச்சமான பகுதியை பாலைவனம் போல மாற்றிவிடும்.
அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்படும். நீர் நிலைகள் முற்றிலுமாக வறண்டு போகும். சுழற்சி நின்றதால் மழைப்பொழிவு ஏறத்தாழ சாத்தியமற்றதாக மாறிவிடும். எனவே வெளிச்சமான பகுதி பொட்டல் காடாக மாறிவிடும். அதேபோல இருளான பகுதிகளில் உயிர்கள் வாழ்வதற்கு கடும் போட்டி ஏற்படும். கடும் குளிர் இந்த பகுதிகளை ஆக்கிரமிக்கும். இவை அனைத்திற்கும் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் முக்கிய காரணியாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பேராசிரியர் பெனடிக்ட் சோஜா, நேச்சர் ஜியோசைன்ஸ் மற்றும் பிஎன்ஏஎஸ் ஆகியவற்றில் இது குறித்த ஆய்வு முடிவுகளை எழுதியுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது, "மனிதர்களின் நடவடிக்கை காரணமாக பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது. இது துருவ பகுதிகளில் உள்ள பனிப்பாறைகளை உருக்குகிறது. உருகும் நீர், கடலில் கலக்கிறது. அதாவது பூமியின் மையப்பகுதிக்கு வருகிறது. இது பூமியின் சுழற்சி வேகத்தை பாதிக்கிறது.
இந்த வேகம் பாதிக்கப்பட்டால் பல்வேறு விளைவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக விண்வெளி பயணங்களில் பல தவறுகள் நடக்கும். பூமியின் சுழற்சி வேகத்தை கணக்கிட்டுதான் நிலவுக்கும், செவ்வாய் உள்ளிட்ட வெளி கிரகங்களுக்கும் நாம் விண்கலன்களை அனுப்புகிறோம். அப்படி இருக்கையில், சுழற்சி வேகம் குறையும்போது நமது கணக்கீடுகள் அனைத்தும் தோல்வியடையும்" என்று கூறியுள்ளார்.
சுழலும் நாற்காலியில் உட்கார்ந்துக்கொண்டு, இரு கைகளையும் நீட்டியவாறு சுழன்று பாருங்கள். பின்னர் இரண்டு கைகளையும் நெஞ்சோடு சேர்த்து வைத்து சுழன்று பாருங்கள். இரண்டுக்கும் சுழற்சி வேகம் வேறுபடும். கைகளை நீட்டியிருக்கும் போது வேகம் குறைவாகவும், கைகளை உடலோடு சேர்த்து வைக்கும்போது வேகம் அதிகமாகவும் இருக்கும்.
பூமியின் சுழற்சியும் இதே கணக்குதான். துருவ பகுதியில் பனிக்கட்டிகள் இருக்கும் வரை பூமியின் வேகம் சீராக இருக்கும். அதுவே, இந்த கட்டிகள் நீராக உருகி மையப்பகுதிக்கு வரும்போது வேகம் குறையும் என்று பூமியின் சுழற்சி குறித்து ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications