ரத்த நிறமாய் மாறும் நிலவு.. இந்த தேதியில் தூங்காதீங்க! நாசா சொல்லும் அட்வைஸ்
நியூயார்க்: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 13ம் தேதி நள்ளிரவு தொடங்கி, 14ம் தேதி அதிகாலை வரை நீடிக்கிறது. தூங்காமல் வானத்தை பார்த்தால் இந்த சந்திர கிரகணத்தை முழுமையாக ரசிக்க முடியும் என்று நாசா கூறியிருக்கிறது. இது இந்தியாவில் தெரியுமா? எப்போது பார்க்கலாம்? என்பது குறித்து இந்த செய்தி விவரிக்கிறது.
சந்திர கிரகணத்தின்போது நிலவு ரத்த சிவப்பாக மாறும். இது பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக, ரம்மியமாக, இயற்கையின் அதிசயமாக இருக்கும்.

சந்திர கிரகணம் என்றால் என்ன?:
சூரியனை பூமி சுற்றுகிறது. பூமியை நிலவு சுற்றுகிறது. இது மூன்றும் ஒரே நேர்க்கோட்டில்.. அதாவது முதலில் சூரியன் அடுத்து பூமி, கடைசியாக நிலவு வருவதைத்தான் நாம் சந்திர கிரகணம் என்று கூறுகிறோம். இந்த நேரத்தில் சூரியனின் ஒளி நிலவு மீது விழாது. ஆனால், பூமி மீது விழுந்து நிலவுக்கு எதிரொலிக்கும். இதனால் நிலவு ரத்த நிறத்தில சிவப்பாக தோன்றும். இதைத்தான் சந்திர கிரகணம் என்று கூறுகிறார்கள்.
பாதி கிரகணம் நடக்கும் நேரத்தில் இப்படி தெரியாது. முழு கிரகணத்தின்போதுதான் இது தெரியும்.
எப்போது தோன்றும்?:
இது இந்தியாவில் தெரியாது. ஏனெனில் கிரகணம் நடக்கும்போது இந்தியாவில் பகல் பொழுதாக இருக்கும். அதனால்தான் இந்தியாவில் எங்கு இருந்தாலும் இதை பார்க்க முடியாது. ஆனால் அமெரிக்காவிலிருந்து பார்க்க முடியும். மார்ச் 13ம் தேதி இரவு 10.57 மணிக்கு இந்த கிரகணம் தொடங்கும். கொஞ்சம் கொஞ்சமாக நிலவு மறைந்துக்கொண்டே வந்து கடைசியில் அடுத்த நாள் அதிகாலை, அதாவது மார்ச் 14ம் தேதி அதிகாலை 2.31க்கு முழு சந்திர கிரகணம் தெரியும். அப்போது நிலவு சிவப்பாக இருக்கும்.
சந்திர கிரகணத்தின்போது என்ன செய்ய கூடாது?:
என்ன வேண்டுமானாலும் செய்யலாம். சில கிரகணத்தின்போது சாப்பிடாமல் இருப்பார்கள். ஒவ்வொரு மதத்திலும் சில விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கும். ஆனால், உங்களுக்கு பசி எடுத்தால் சாப்பிடலாம். கிரகணத்தின்போது இதை செய்யக்கூடாது என்றோ, இதை செய்ய வேண்டும் என்றோ எந்த மருத்துவர்களும் எதையும் சொல்லவில்லை. கர்ப்பினியாக இருப்பவர்கள் வெளியில் வரக்கூடாது என்று சிலர் கூறுவார்கள். உங்களுக்கு வெளியில் போக தோன்றுகிறது என்றால் உதவிக்கு ஒருவரை அழைத்துக்கொண்டு தாராளமாக வெளியே போகலாம்.
தொடக்தக்தில் நமக்கு நிலவு பற்றி அவ்வளவாக தெரியாது. நிலவு என்றால் என்ன? அது நம்மை சுற்றுகிறதா? நாம் அதை சுற்றி வருகிறோமா? போன்ற விஷயங்கள் தெரியாது. அறிவியல் வளராத காலம் அது. எனவே சில பழக்கவழக்கங்கள் கடைபிடிக்கப்பட்டு வந்தன. அதை இப்போதும் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications