வேலையை விட்டு தூக்குங்க! லிஸ்ட் எடுக்கும் எலான் மஸ்க்.. ட்விட்டரில் வேலையை இழக்கும் பலநூறு ஊழியர்கள்
நியூயார்க்: ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் பலரை நீக்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ட்விட்டர் நிறுவனத்தை அதிகாரபூர்வமாக வாங்கினார் எலான் மஸ்க். 44 பில்லியன் டாலர் ஒப்பந்தம் நேற்று முறையாக நிறைவேற்றப்பட்டது. முன்பு இந்த 44 பில்லியன் டாலர் ஒப்பந்தம் போடப்பட்ட பின் அதில் இறுதி கையெழுத்து போடாமல் எலான் மஸ்க் நேரம் தாழ்த்தி வந்தார்.
இதற்கு எதிராக வழக்கு போடப்படும் என்று ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாரபூர்வமாக நிறுவனம் கைமாறியது.

ட்விட்டர்
ட்விட்டர் நிறுவனத்தில் இருக்கும் பொய்யான கணக்குகள்.. அதாவது பாட் கணக்குகள் குறித்த பட்டியலை கொடுத்தால் மட்டுமே அதை நான் வாங்குவேன் என்று மஸ்க் குறிப்பிட்டு இருந்தார். இதன் காரணமாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்காமல் அவர் காலம் தாழ்த்தி வந்தார். ஆனால் இதற்கு எதிராக வழக்கு தொடுப்போம் என்று ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ட்விட்டர் நிறுவன டீலிங்கை முடிக்க மஸ்க் ஒப்புக்கொண்டார்.

நீக்கம்
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதும் முதல் வேலையாக அதை உயர் அதிகாரிகளை வேலையில் இருந்து மஸ்க் நீக்கினார். ட்விட்டர் சிஇஓ பராக் அக்ரவால் பணியில் இருந்து நீக்கப்பட்டார். சிஎப்ஓ உள்ளிட்ட மற்ற உயர் அதிகாரிகளும் நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ட்விட்டர் தலைமையகத்தில் இருந்து இவர்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிஇஓ பராக் அக்ரவால்
ட்விட்டர் உயர் அதிகாரிகளுடன் மஸ்க் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார். முக்கியமாக பராக் உடன் மஸ்க் கடுமையாக மோதி வந்தார். இந்த நிலையில்தான் பராக் உள்ளிட்டோர் நீக்கப்பட்டு உள்ளனர். ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கிய நிலையில் பலரை வேலை நீக்கம் செய்கிறார். வேலை நீக்கம் செய்ய வேண்டிய ஊழியர்களின் பட்டியல் தயாராகி வருகிறது.

மஸ்க்
மஸ்க்கின் முடிவிற்கு ட்விட்டர் நிர்வாகிகள் பலர் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல்வேறு கிளைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களை மஸ்க் வேலையில் இருந்து நீக்க உள்ளார். முன்னாள் சிஇஓ பராக் அக்ரவால் இது தொடர்பாக முன்பே எச்சரித்து இருந்தார். வேலை நீக்கம் தொடர்பாக முன்பே தகவல் வெளியான நிலையில் தற்போது அது உறுதியாகி உள்ளது. ட்விட்டர் ஊழியர்கள் இடையே இந்த சம்பவம் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊழியர்கள்
குறைவான ஊழியர்களுடன் இந்த நிறுவனத்தை நடத்த மஸ்க் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இப்போது இருக்கும் ஊழியர்களில் 50 -70 சதவிகிதம் பேர் வரை வேலையில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் லிஸ்டை உடனே தயார் செய்யுங்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேனேஜர்களுக்கு மஸ்க் உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

நீக்கம் எப்படி?
முன்னதாக மஸ்க் தனது ட்விட்டர் பயோவில் "Chief Twit" என்று மாற்றிவிட்டார். அதாவது நான்தான் இந்த நிறுவனத்தின் தலைவர் என்பதை உணர்த்தும் விதமாக அந்த மாற்றத்தை மஸ்க் செய்து இருந்தார். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய நிலையில் அதன் சிஇஓவாக அவர் பதவி ஏற்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நிறுவனத்தின் உரிமை மட்டுமின்றி, நிறுவனத்தை நேரடியாக கண்காணிக்கும் பணிகளையும் அவரே செய்ய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமாக ட்விட்டர் நிறுவனம் மூலம் தடை செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப் போன்ற உறுப்பினர்கள் மீண்டும் ட்விட்டரில் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications