Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

26/11 மும்பை தாக்குதலின் முக்கிய புள்ளி! இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா நீதிமன்றம் ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் லஷ்கர் இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த தஹாவூர் ராணாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக இந்தியா கோரி வந்த நிலையில் தற்போது இந்த கோரிக்கைக்கு அமெரிக்க நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

மும்பையில் உள்ள பிரபல ஓட்டலில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி திடீரென புகுந்த தீவிரவாதிகள் நவம்பர் 29ம் தேதி வரை இடைவிடாது தாக்குதல் நடத்தினர் இதில் 164 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல 308 பேர் வரை காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ-தொய்பா தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஹெட்லிக்கு உதவியதாக தஹாவூர் ராணா மீது மத்திய அரசின் விசாரணை அமைப்பு குற்றம்சாட்டியது.

US approves extradition of Mumbai attack mastermind Dahavur Rana to India

தஹாவூர் ராணாவை இந்தியா வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் NIA கடந்த 2020ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவுக்கு கோரிக்கை வைத்தது. இது தொடர்பான வழக்கு கலிபோர்னியாவின் மத்திய மாவட்ட, அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் அமெரிக்க மாஜிஸ்திரேட் நீதிபதி ஜாக்குலின் சூல்ஜியன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டதாக குறிப்பிட்ட நீதிபதி, ராணைவை இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்புதல் அளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+