ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் பலன் இல்லை- அவசர அங்கீகாரத்தை திரும்ப பெற்றது யு.எஸ். மருந்து நிர்வாகம்
நியூயார்க்: கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் பலன் இல்லை என்பதால் இதற்கு தரப்பட்ட அவசர அங்கீகாரத்தை அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகம் திரும்பப் பெற்றதாக நியூயார்க் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துதான் கடந்த 2 மாதங்களாக உலகின் மருத்துவ துறையில் முதன்மை பேசு பொருளாக இருந்து வருகிறது. இந்த மருந்தை ஏற்றுமதி செய்யாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்தியாவுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனையடுத்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதிக்கான தடையை உடனே மத்திய அரசு நீக்கியது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை மத்திய அரசு ஏற்றுமதி செய்தது. மலேரியாவை கட்டுப்படுத்தக் கூடிய இந்த மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது என்பது பொதுநம்பிக்கை.
இதனை மையமாக வைத்தே பிரதமர் மோடி, இந்தியாதான் உலக நாடுகளையே காப்பாற்றி வருகிறது என்கிற பொருளில் பேசியிருந்தார். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதி இந்தியாவின் பெருமைமிகு அடையாளமாகவும் போற்றப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளேடு ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் போதுமான பலன்கள் கிடைக்கவில்லை. இதனால் இதற்கு அளிக்கப்பட்ட அவசர அங்கீகாரத்தை திரும்பப் பெறுவதாக அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகமான (The Food and Drug Administration) முடிவு செய்திருக்கிறது என்பதுதான் அந்த செய்தி. அமெரிக்காவில் இந்த மருந்து பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவின் The Food and Drug Administration அமைப்பு இம்முடிவை எடுத்துள்ளதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
ஈரானை ஏமாற்றிய இந்திய மாலுமி.. ஹார்முஸ் ஜலசந்தியை தந்திரமாக கடந்து மும்பை வந்து சேர்ந்தது எப்படி? -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
அமெரிக்க ராணுவ நிலைகள் மீதான தாக்குதல் தொடரும்.. ஈரானின் புதிய தலைவர் அறிவிப்பு! -
இறங்கி வரும் ஈரான்.. ஒரு வழியாக முடிவுக்கு வரும் போர்? திடீரென வந்த 3 முக்கியமான கண்டிஷன்கள் -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்.. யாரும் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்- உச்ச நீதிமன்றம்! -
உள்நாட்டிலேயே கேஸ் இல்லாத போது.. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி படுஜோர்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு -
ஈரான் போரில் வீழ்ந்த 4-வது அமெரிக்க விமானம்.. ஈராக்கில் அமெரிக்க விமானம் விபத்தில் சிக்கியது எப்படி? -
கிட்ட வந்த ஆசாமி.. மாஜி முதல்வர் மீது துப்பாக்கி சூடு.. NSG செய்த செயலால் நூலிழையில் தப்பினார்!












Click it and Unblock the Notifications