கொரோனா 3-வது அலை உக்கிரம்... அமெரிக்காவில் ஒருநாள் பாதிப்பு விஸ்வரூபம்- ஒரே நாளில் 1,911 பேர் மரணம்
நியூயார்க்: கொரோனா 3-வது அலை உலக நாடுகளில் உக்கிரமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,18,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் அமெரிக்காவில் 1,911 பேர் ஒரேநாளில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. உலக நாடுகளில் ஒருநாள் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,98,188; ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 8,383.

23.13 கோடி பேர் பாதிப்பு
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,13,41,291; உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 47,41,387; உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 20,79,87,089.

அமெரிக்காவில் விஸ்வரூபம்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல தடுப்பூசிகளை உலக நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. ஆனாலும் கொரோனா 3-வது அலை தற்போது வீரியமாக பரவி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து 1 லட்சத்தைத் தாண்டியதாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் இன்று காலை நிலவரப்படி 1,18,880 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒரே நாளில் 1,911 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் சுமார் 2,000 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,35,23,908. அமெரிக்காவில் கொரோனாவுக்கு இதுவரை 7,02,915 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 3,30,21,618

2-வது இடத்தில் இங்கிலாந்து
அமெரிக்காவுக்கு அடுத்ததாக இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கிலாந்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36,710 ஆக பதிவாகி இருக்கிறது. மேலும் இங்கிலாந்தில் ஒரே நாளில் 182 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்துக்கு அடுத்ததாக இந்தியாவில் 31,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இந்தியாவில் வியாழனன்று மட்டும் 319 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கவும் தொடங்கி உள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,35,93,492. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 4,46,399 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3,28,40,724.

இந்தியாவில் அதிகரிக்கும் பாதிப்பு
துருக்கியில் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 27,844; பிரேசிலில் 24,611; ரஷ்யாவில் 21,438 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா மரணங்களில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக ரஷ்யா 2-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் ஒரே நாளில் 820 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் 811 பேரும் பிரேசிலில் 607 பேரும் ஈரானில் 317 பேரும் நேற்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
-
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications