Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்க மண்ணிலேயே.. சீக்கியரை கொல்ல சதி? விட மாட்டோம்! இந்தியாவிற்கு பிடன் வார்னிங்.. சொன்னது என்ன?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க மண்ணில் சீக்கியர் ஒருவரை கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதாம். இது தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் பல வெள்ளை மாளிகை சோர்ஸ்கள் பகிர்ந்த தகவலை வெளியிட்டுள்ளன.

சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகார்களை அவர் அடுக்கி இருந்தார்.

US warns India on a plot to eliminate Sikh separatist in New York

அவர் வைத்துள்ள புகார்கள் ஒவ்வொன்றாக பின்வருமாறு, அவரது மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே "நம்பகமான" தொடர்பை கனடா உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக ட்ரூடோ கூறி உள்ளார். அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் இந்த விவகாரத்தை எழுப்பினார் என்றும் கூறி உள்ளார்.

இந்த கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கியமான காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது நமது இறையாண்மையில் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம் என்றுள்ளார்.

ஜோ பிடன்: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவிற்கு எதிராக குற்றஞ்சாட்டி இருந்த நிலையில் உலக நாடுகளை இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிராக ஒன்று திரட்ட கனடா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே அவர் உலக நாட்டு தலைவர்களுடன் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா கனடா மோதலில் ஃபை ஐஸ் உளவுக்குழு அதாவது Five Eyes intelligence என்ற அமைப்பு இந்தியாவிற்கு எதிரான விசாரணையை கண்காணித்து வருகிறது. இவர்கள் வெளிப்படையாக இதில் கூட்டு அறிக்கை வெளியிடவில்லை என்றாலும் இதில் விசாரணை வேண்டும் என்பதில் இந்த குழு தீர்க்கமாக உள்ளது.

ஐந்து கண்கள் என்பது ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய ஒரு உளவுத்துறை கூட்டணியாகும். இது 1946 இல் உருவாக்கப்பட்டது. இந்த நாடுகள் கொடுத்த உளவு அறிக்கை அடிப்படையில்தான்.. நிஜ்ஜாரை இந்தியா கொலை செய்ததாக கனடா குற்றஞ்சாட்டியது.

அதாவது இந்தியாவின் நண்பன் அமெரிக்கா.. இந்தியாவிற்கு எதிராக செய்த உளவு நடவடிக்கை மூலம்தான் கனடா இந்தியாவிற்கு எதிராக புகார்களை வைத்துள்ளது.

புதிய புகார்: இந்த நிலையில்தான் அமெரிக்க மண்ணில் சீக்கியர் ஒருவரை கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதாம். இது தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் பல வெள்ளை மாளிகை சோர்ஸ்கள் பகிர்ந்த தகவலை வெளியிட்டுள்ளன.

அதன்படி அமெரிக்க மண்ணில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவரைக் கொல்லும் சதித்திட்டத்தில் இந்திய அரசு ஈடுபட்டிருக்கலாம் என பிடன் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாம்.

நியூயார்க்கில் இயங்கி வரும் வழக்கறிஞர் குர்பத்வந்த் சிங் பன்னுனை குறிவைத்ததாகக் கூறப்படும் சதிதிட்டத்தை அமெரிக்கா முறியடித்துள்ளதாம். அமெரிக்க அதிகாரிகளின் தலையீட்டைத் தொடர்ந்து இந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. நேரடியாக வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்த காரணத்தால் இந்த கொலை நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக அந்த செய்திகளில் கூறப்பட்டு உள்ளன.

வழக்கறிஞர் குர்பத்வந்த் சிங் பன்னுன் "நீதிக்கான சீக்கியர்களின் குழு" என்ற குழுவில் இயங்கி வருகிறார். இந்த குழுவின் பொது ஆலோசகர் ஆவார். இந்தியாவின் பஞ்சாபிலிருந்து காலிஸ்தான் நாட்டை பிரிப்பதற்காக போராடும் குழுக்களில் ஒன்றாகும். இவரைத்தான் கொலை செய்ய இந்தியா முயன்றதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+