14 வயது சிறுவன் ஒரு வருடமாக பலாத்காரம்.. பகீர் கிளப்பிய 23 வயது இளம் பெண்.. ஆடிப்போன போலீஸ்
நியூயார்க்: அமெரிக்காவின் அர்கான்சஸ் மாகாணத்தில் 14 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததால் கர்ப்பமடைந்த 23 வயது பெண்ணை அந்த நாட்டு போலீஸார் கைது செய்தார்கள்.
ஒரு வருடத்திற்கு முன்பு சிறுவனை அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுபற்றி போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் அப்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் அர்கான்சஸ் மாகாணத்தின் பாராகௌல்டு பகுதியில் வசித்து வரும் இளம் பெண் பிரிட்டனி க்ரே (23 வயது). இவர் கடந்த ஒரு வருடங்களுக்கும் மேலாக 14 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
வெளிச்சத்திற்கு வந்தது
18 வயதுக்கும் கீழ் உள்ள அந்த 14 வயது சிறுவனுடன் க்ரே பாலியல் உறவு வைத்திருப்பதை பார்த்து ஒருவர்(பெயர் வெளியாகவில்லை) அதிர்ச்சி அடைந்தார் இதுபற்றி பாராகௌல்டு போலீஸ் ஸ்டேசனை தொடர்புகொண்டு புகார் அளித்திருக்கிறார். 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இருவரும் உடலுறவு கொள்வதைக் கண்டதாக போலீசாருக்கு தெரிவித்தார். அப்போது தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கிரே வீட்டில் வசிப்பு
ஆனால், அதற்கு முன்பே 2020, பிப்ரவரி மாதத்தில் இன்னொருவரும் அர்கான்சஸ் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு பிரிவு ஹாட்லைனுக்கு பிரிட்டனி க்ரேவின் செயல் குறித்து அழைத்து புகார் கூறியிருந்தார். . மேலும், க்ரேவின் வீட்டிலேயே அந்தச் சிறுவன் வசித்துவருவதாகவும் கூறியிருந்தார்.
பாலியல் உறவு
தொடர்ந்து இரண்டு புகார்கள் வந்த நிலையில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது 14 வயது சிறுவனுடன் க்ரே பாலியல் உறவு வைத்திருந்தது மட்டுமல்லாமல், தற்போது கர்ப்பமாக இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.
விடுதலை
மார்ச் 1ஆம் தேதி க்ரேவை போலீஸார் கைது செய்தனர். அவர்மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்ந்தனர். ஆனால், வியாழக்கிழமை 5 ஆயிரம் டாலர் அபரதம் செலுத்திய பிறகு அவரை விடுதலை செய்துள்ளார்கள்.வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்