எலும்பை உறைய வைக்கும் "0" டிகிரி உறைபனி.. மினி காஷ்மீராய் நடுங்க வைக்கும் ஊட்டி.. சமாளிக்கவே முடியல
உதகையில் கடும்குளிர் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
நீலகிரி: உதகையில் குறைந்த பட்ச வெப்பநிலையாக 2 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது... சமவெளி பகுதிகளில் "0" டிகிரி செல்சியஸுக்கு போய்விட்டது. இந்த கடும் உறை பனி பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.
ஊட்டியில் வருடந்தோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி முடியும் வரை பனிக்காலம் நிலவும்.. ஆனால், இந்த வருடம், காலநிலை மாறுபாட்டால், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஆகியவை நீலகிரி மாவட்டத்தில் தாமதமாக தொடங்கின...
அதனால், இந்த முறை பனிக்காலமும் சற்று லேட்டாகவே தொடங்கியது. கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கி ஒரு வாரம் முழுக்க நீர் பனிப்பொழிவின் தாக்கம் ஏற்பட்டது..

புல்வெளி புல்வெளி
பிறகு, நவம்பர் 22-ம் தேதி ஊட்டியில் உறைபனிப் பொழிவு தொடங்கிய ஒரு வாரத்துக்குள், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவிட்டது. அப்போதுதான், மேன்டூஸ் புயல் தாக்கம் காரணமாக உறைபனி முற்றிலும் நின்றுவிட்டது... இதற்கு பிறகு, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஊட்டியில் மறுபடியும் உறைபனியின் தாக்கம் நிலவியது.. அப்போது, ஊட்டி தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா, படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், ரேஸ்கோர்ஸ் ஆகிய பகுதிகளில் பனி படர்ந்து நிறைந்திருந்தது.. இதனால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் பனி கொட்டி கிடந்தது.

புடைக்கும் நரம்புகள்
உதகை மக்கள் இந்த தொடர் பனிப்பொழிவால் அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளனர்.. கடந்த வாரம் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் ஓரளவு அதிகரித்த நிலையில், மறுபடியும் கடும் குளிர் வாட்ட தொடங்கிவிட்டது.. பச்சை புல்வெளிகளில் உறை பனி பொழிவு ஏற்பட்டு வெள்ளை பட்டு கம்பளம் போல் காட்சி தருகிறது.. பகல் நேரங்களில் ஓரளவு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை 3 மணிக்கே குளிர் சூழ்ந்துவிடுகிறது.. அதிகாலை 9 மணி வரை இந்த குளிர் விலகாமல் உள்ளது.. இதனால், நரம்புகளே புடைத்து கொள்ளும் அளவுக்கு பனிப்பொழிவு நிலவுகிறது .

மினி காஷ்மீர்
ஊட்டி நகரம், தலைகுந்தா, காந்தள் பகுதிகளிலும் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.. வாகன ஓட்டிகள், உதகை நகராட்சி சந்தையில் பாரம் தூக்கும் தொழிலாளர்கள் சாலை ஓரங்களில் தீமூட்டி குளிரை சமாளிக்க வேண்டிய நிலையும் உள்ளது.. இந்த பனியிலும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து ஊட்டியை ரசித்து செல்கிறார்கள்.. இன்றைய தினம் உறைபனி, 2 டிகிரி செல்சியஸ் தொட்டுவிட்டது.. புல்வெளிகள், மரம், செடி, வாகனங்களில் பனிக்கட்டிகள் படிந்து கிடக்கின்றன.. இதனால் ஊட்டியே, ஒரு "மினி காஷ்மீர்" போல காணப்படுகிறது.

உறைஞ்சு போயிடுச்சே
2 நாட்களுக்கு முன்பு தொடங்கிய உறைபனிபொழிவானது, இன்று கடும் தாக்கத்தை தந்துள்ளது.. நகர பகுதிகளில் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், சமவெளி பகுதிளில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இன்று பதிவாகி உள்ளது.. இந்த கடும் பனி பொழிவின் காரணமாக ஆட்டோக்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது உறைப் பனி சூழ்ந்து காணப்பட்டுள்ளது.. இதனால் வாகனங்களில் டீசல் உறைந்து போய்விடுவதால், காலை வேளையில், வாகனங்களை இயக்குவதில் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.. இந்த மாதம் இறுதிவரை இப்பனி பொழிவு இப்படியேதான் அதிகரித்து காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..!!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications