நீலகிரியில் 40 நாட்களில் 10 புலிகள் மரணம்.. மர்மம் என்ன? ஆய்வு நடத்தும் வனத்துறையினர்!
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 10 புலிகள் மர்மமான முறையில் இறந்துள்ளன. இதையடுத்து புலிகளின் இறப்பு குறித்து ஆய்வு செய்ய தேசிய புலிகள் ஆணைய குழுவினர் ஊட்டிக்கு நாளை வருகிறார்கள்.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டமானது பெரும்பாலான பகுதி வனப்பகுதிகளை உள்ளடக்கியது. இங்கு காட்டு யானைகள், புலிகள், கரடிகள், சிறுத்தைகள், காட்டு எருமை, மான்கள், சிறுத்தைகள் என பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

அண்மைக்காலமாக இங்கு புலிகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 17ஆம் தேதி சின்னக்குன்னூர் வனப்பகுதியில் ஒரு ஆண் புலிக்குட்டி இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த கால்நடை மருத்துவர்கள் அந்த குட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
மேலும் சில உடல் பாகங்களை ஆய்வுக்காக கோவைக்கு அனுப்பி வைத்தனர். இதன் அறிக்கையில் ஆண் புலிக்குடி தாய்ப்பால் கிடைக்காததால் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து மற்ற குட்டிகளையும் தாய்ப்புலியையும் வனத்துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சின்ன குன்னூர் வனப்பகுதியில் ஏற்கெனவே புலிக்குட்டி இறந்த பகுதியில் மேலும் 3 பெண் புலிக்குட்டிகளும் இறந்து கிடந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு குட்டி மீட்கப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிரது. இதையடுத்து அந்த உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
புலிக்குட்டிகள் தனியாக் இருந்ததால் தாய்புலியின் நிலையை அறிய 40 பேர் கொண்ட 5 குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தாய்ப்புலியை தீவிரமாக தேடி வருகிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நீலகிரி மாவட்டம் மற்றும் முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் 10 புலிகள் வரை உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
இது வன ஆர்வலர்களிடையே வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 10 புலிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நேரில் விசாரிக்க தேசிய புலிகள் ஆணைய குழுவினர் நாளை ஊட்டிக்கு வருகிறார்கள்.
முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் 6 புலிக்குட்டிகள் இறந்த பகுதி மற்றும் எமரால்டு நடுவட்டம், கார்குடி ஆகிய வனப்பகுதிகளுக்கு நேரில் சென்று தடயங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளனர். மரபணு குறைபாடு காரணமாக இரு வெள்ளைப் புலிகளும் இறந்துள்ளன.
கடந்த 40 நாட்களில் பெரிய புலிகளும் குட்டி புலிகளும் இயற்கைக்கு மாறாக இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக புலிகள் கணக்கெடுப்பானது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. ஆனால் இந்த கணக்கெடுப்பை இனி ஆண்டுக்கு ஒரு முறை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உதகையில் மட்டும் 52 புலிகள் உள்ளது. இவற்றை தீவிரமாக கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவலாஞ்சி அணை அருகே உள்ள தண்ணீர் தொட்டிக்கு செல்லும் வழியில் இரு புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications