டூவீலரை கீழே தள்ளிவிட்ட காட்டு யானை.. தெறித்து ஓடிய இளைஞர்கள்.. உயிரை காப்பாற்றிய லாரி ஓட்டுநர்!
Recommended Video
ஊட்டி: கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்ற காட்டுயானை. இருசக்கர வாகனத்தை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலைகளில் அண்மை காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில் ஒற்றை காட்டு யானை ஒன்று இரவு நேரங்களில் சாலையில் முகாமிட்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. வனத்துறையும் அந்த யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை குஞ்சப்பனை என்ற பகுதியில் அந்த ஒற்றை காட்டு யானை காட்டுப்பகுதியிலிருந்து வெளியே வந்தது. அப்போது சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்ல வழியில்லாததால், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ராஜ நடைபோட்டு சாலையில் நடந்து சென்றது.

அப்போது எதிர்பாராத விதமாக மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவர், யானையை கண்டதும் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். யானை இவர்களைத் தாக்கும் என்ற சூழ்நிலையில், இருசக்கர வாகனத்தின் பின்னே வந்த லாரி ஓட்டுனர் இருசக்கர வாகனம் அருகே லாரியை நிறுத்தி இளைஞர்களை காப்பாற்றினார்.
சில நொடிகள் இருசக்கர வாகனத்தை தொட்டு பார்த்த யானை, யாருக்கும் எவ்வித இடையூறுமின்றி சிறிது தூரம் சாலையில் நடந்து சென்று, பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் மலைப்பாதையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications