நீலகிரி: ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்து: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு!
நீலகிரி: நீலகிரி குன்னூர் அருகே இன்று முற்பகல் நிகழ்ந்த விமான விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். பிபின் ராவத் உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கோவை சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு இன்று காலை பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர் காட்டேரி பார்க் என்ற இடத்தில் மலைமுகட்டில் மரம் ஒன்றின் மீது மோதி விபத்தில் சிக்கியது.

விபத்தில் சிக்கி கீழே நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டர் தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்ததாக இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் விவரம்: முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவர், பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டெர், லெப். கர்னல் ஹர்ஜிந்தர் சிங், குருசேவக் சிங், ஜிதேந்திர குமார், விவேக் குமார், சாய் தேஜா, ஹாவ் சத்பால்.












Click it and Unblock the Notifications