ஹாயாக மாடி ஏறிய சிறுத்தை.. கண்களில் அத்தனை பசி!.. வீடியோவை பார்த்து ஈரக்குலையே நடுங்கி உறைந்த ஊட்டி!
உதகை: உதகை அருகே குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகி உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Recommended Video
நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப் பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் அப்போது குடியிருப்புகளின் அருகே உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் உதகை அருகே உள்ள ரிச்சிங் காலனி பகுதியில் கடந்த சில நாட்களாக குடியிருப்புகளின் அருகே கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

வனவிலங்குகள்
இரவு நேரங்களில் குடியிருப்புகளின் அருகே வனவிலங்குகள் உலா வருவதால் அப்பகுதியில் வசிக்கும் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு ரிச்சிங் காலனி பகுதியில் குடியிருப்புகளின் அருகே உலா வந்த சிறுத்தை அப்பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்தது.

நடமாடிய காட்சி
குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாடிய காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். மேலும் குடியிருப்புகளின் அருகே கடந்த சில நாட்களாக சிறுத்தையின் நடமாட்டம் காணப்படுவதால் வனத்துறை சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோ வைரல்
அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிறுத்தை ஒன்று மெதுவாக மாடிப் படிகளில் ஏறுகிறது. பின்னர் அங்குள்ள சிட்டிங் ஏரியாவில் துணியால் மூடப்பட்ட இடங்களை மோப்பம் பிடிக்கிறது. பின்னர் கண்ணாடி அறையை நின்று பார்க்கிறது. அதன் முகமே அதில் பிரதிபலித்ததால் ஏதோ செமையாக தீணி மாட்டிச்சி என நினைத்த சிறுத்தைக்கு, அய்யோ அது நம் முகம் என ஏமாற்றமடைந்தது.

இரை தேடி வந்த சிறுத்தை
இப்படியே ஒவ்வொரு இடமாக தனக்கான இரை இருக்கிறதா என பார்த்துக் கொண்டே வந்தது. இந்த வீடியோ வெளியான நிலையானதை பார்க்கும் மக்கள், சிறுத்தை வந்த நேரத்தில் மறதியாக மக்கள் யாரேனும் இருந்திருந்தால்... என்னவாகியிருக்கும் என நினைத்தால் ஈரக் குலையே நடுங்குகிறது.












Click it and Unblock the Notifications