வேகத்தடையில் ஏறி இறங்கியபோது ஆம்புலன்ஸில் இருந்து தூக்கி வீசப்பட்ட நோயாளி.. நீலகிரியில் ஷாக்!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வேகத் தடையில் தனியார் ஆம்புலன்ஸ் ஏறி இறங்கிய போது ஸ்ட்ரெச்சருடன் நோயாளி வெளியே விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுப்பட்டறையில் இருந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். அப்போது குன்னூர் லெவல் கிராசிங் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது வேகத்தடையில் ஏறி, இறங்கியது.

அப்போது, ஆம்புலன்ஸின் பின் கதவு திறந்து, ஸ்டெச்சருடன் நோயாளி ரோட்டில் விழுந்தார். இதனை கண்ட பொதுமக்கள் பதறிப் போய், பின்னால் வந்த வாகனங்களை உடனே நிறுதினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பின்னர் கூச்சல் போட்டு ஆம்புலன்ஸை நிறுத்தி, உடல் நலம் பாதிக்கப்பட்ட நோயாளியை மீண்டும் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உயிர்காக்கும் வாகனமாக செயல்படும் ஆம்புலன்ஸ் மூலமே அசம்பாவிதம் நேர இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆம்புலன்ஸ்களை சரியாக பராமரிக்கப்படாததால்தான் இதுபோன்ற சம்பவம் நிகழ்வதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.












Click it and Unblock the Notifications