100 பேருக்கு தொற்றை பரப்பிய ஒருவர்.. நடுக்கத்தில் ஊட்டி.. கட்டிக்காத்த கட்டுப்பாட்டுக்கு ஆபத்து!
100 பேருக்கு தொற்று பரவி உள்ளதால் நீலகிரி கிலியில் உள்ளது
ஊட்டி: நீலகிரி மக்கள் உச்சக்கட்ட பீதியில் உள்ளனர்... ஒருவர் 100 பேருக்கு தன்னுடைய தொற்றை கடகடவென பரப்பிவிட்டுள்ளார்.. இதனால் நீலகிரியே நடுங்கி போய் உள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே நீலகிரி மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் நிறைய விதிக்கப்பட்டன.. அவை கடைபிடிக்கவும் பட்டன.. எல்லைகள் மூடப்பட்டன... ஆய்வுகள் நடத்தப்பட்டன.. சோதனைகள் அதிகரிக்கப்பட்டன.. தொற்றே இல்லாத மாவட்டமாகவும், அடுத்த சில தினங்களிலேயே பச்சையை நோக்கி வீறு கொண்டு நடைபோட்ட மாவட்டமாகவும் நீலகிரி திகழ்ந்தது.

ஆனால், கோயம்பேடு சமாச்சாரம் வந்ததுமே இது நொறுங்கியது.. கோயம்பேட்டிற்கு காய்கறி இறக்க சென்ற லாரி டிரைவர்களுக்கு தொற்று பரவி, அதன் மூலம் சிலர் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்பட்டு, டிஸ்சார்ஜ் ஆகி சென்றனர்.. ஆனால், உயிர்பலி என்பது முதல்முறையாக காவு வாங்கப்பட்டபோது அச்சம் நீலகிரியில் தென்பட ஆரம்பித்தது.
இப்போது தனக்கு தொற்று வந்த ஒருவர், அதை 100 பேருக்கு பரப்பி விட்டுள்ளது அதிர்ச்சியை தந்து வருகிறது.. ஊட்டி பக்கத்தில் எல்லநள்ளி என்ற பகுதி உள்ளது.. இங்கு தனியார் ஊசி ஃபேக்டரி ஒன்று செயல்பட்டு வருகிறது.. 785 பேர் இங்கு வேலை பார்த்து வருகிறார்கள்.. இங்கு பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கு, கடந்த ஜுன் 16ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது.. அதனால் உடனடியாக கோவை, இஎஸ்ஐ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளார்.
இவர் கடந்த 12-ம் தேதி வரை ஃபேக்டரிக்கு வந்து போயுள்ளார்.. எல்லோரிடமும் சகஜமாக பேசி உள்ளார்.. அங்கு நடத்தப்பட்ட மீட்டிங்குகளிலும் பங்கேற்று பேசி உள்ளார்.. இவருக்கு தொற்று என்பதுமே, அலர்ட் ஆகிவிட்டது சுகாதாரத்துறை.. உடனடியாக டெஸ்ட் எடுக்கப்பட்டது... 100 தொழிலாளர்களுக்கு இந்த தொற்று பரவியது தெரியவந்தது.. அனைவருக்கும் உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை தரப்பட்டு வருகிறது.. அந்த ஃபேக்டரிக்கும் சீல் வைக்கப்பட்டது.
இதை பற்றி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சொல்லும்போது, "நீலகிரியில் தொற்று, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது... எல்லநள்ளி தொழிற்சாலையில், கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவரால் மட்டும், இதுவரை, 100 தொழிலாளர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது... தவிர, 785 தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினரை டெஸ்ட்டுக்கு உட்படுத்தினோம்... தனிமையில் வைக்கப்பட்டவர்கள், எக்காரணத்தை கொண்டும் வெளியே வரக் கூடாது.. விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications