நீலகிரி நித்யா.. பக்கத்து வீட்டுக்காரரிடம் சிரித்து சிரித்து பேசினாராம்! கணவர் என்ன பண்ணார் தெரியுமா
ஊட்டி: நீலகிரியில் நித்யா செய்த துணிச்சல் காரியம் பார்த்தீங்களா? நித்யாவின் பிடிவாதத்தினால் நீலகிரியே நடுங்கிவிட்டது.. அப்படி என்ன நடந்தது கூடலூரில்? யாரிந்த பெண் நித்யா?
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது பந்தலூர்... இங்குள்ள சேரம்பாடி சப்பந்தோட்டை சேர்ந்தவர் லோகேஷ்.. இவருக்கு 42 வயதாகிறது.. இந்த பகுதியிலேயே தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்..

தம்பதி: இவரது மனைவி பெயர் நித்யா.. 35 வயதாகிறது.. இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பிரவீன்.. இவருக்கு 47 வயதாகிறது.. பிரவினுக்கும் திருமணமாகிவிட்டது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி, குழந்தைகளை பிரிந்து வசித்து வருகிறார்.
இந்நிலையில், பக்கத்து வீடு என்பதால், நித்யாவுக்கும்., பிரவீனுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.. பிறகு இதுவே கள்ளக்காதலில் கொண்டுபோய் விட்டுவிட்டது.. இதனால், 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.,. இந்த விஷயம், லோகேஷுக்கு தெரிந்து, கொந்தளித்துள்ளார். எனவே, நித்யாவை கண்டித்து, அறிவுரை சொன்னார்.
கள்ளக்காதல்: ஆனால், நித்யாவின் கள்ளக்காதல் நிற்கவில்லை.. ஒருகட்டத்தில் தம்பதிக்குள் தகராறு வெடித்தது.. இந்த விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுவிட்டது.. போலீசார் எவ்வளவோ சமாதானம் செய்தும்கூட, தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய போவதாக நித்யா பிடிவாதமாக சொல்லிவிட்டார்.. அத்துடன், பிரவீனுடனேயே கிளம்பி சென்று குடும்பமும் நடத்த ஆரம்பித்துவிட்டார். அதாவது, தன்னுடைய வீட்டுக்கு, பக்கத்து வீட்டிலேயே லோகேஷுடன் நித்யா குடும்பம் நடத்தியுள்ளார்.
நேற்றைய தினம் பிரவீனும் நித்தியாவும், வீட்டுக்கு வெளியே வாசலிலேயே நின்று சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தார்களாம்.. இதை பார்த்ததுமே லோகேசுக்கு கடுமையான ஆத்திரம் வந்துள்ளது.. அதனால், வீட்டுக்குள் வேகமாக சென்ற பிரவீன், கூர்மையான கத்தியை எடுத்து வந்து, நித்யாவையும், பிரவீனையும் சரமாரியாக வெட்டிவிட்டார்.. இதில் 2 பேருமே, அலறி துடித்தனர்..
இவர்களது அலறலை கேட்டு பிரவீனின் அப்பா சந்திரன் (70) வீட்டிற்குள்ளிருந்து ஓடிவந்தார். ஆவேசத்துடன் கள்ளக்காதலர்களை வெட்டிக் கொண்டிருந்த லோகேஷை தடுக்க முயன்றார்.. ஆனால் சந்திரனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
தீவிர சிகிச்சை: இதையடுத்து, 3 பேருமே, வீட்டு வாசலில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர்.. பிறகு அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், பிரவீன் மட்டும் சீரியஸாக இருக்கிறாராம்.. தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications