ஒரே ஜில் ஜில் ஜிகா ஜிகாதான்.. அடிக்குது குளிரு.. ஊட்டியை நனைக்கும் பனி.. நடுங்கும் மக்கள்!
நீலகிரி மாவட்டத்தில் மக்களை பனிப்பொழிவுடன் குளிர் வாட்டி வருகிறது.
Recommended Video

ஊட்டி: ஊட்டி முழுவதுமே ஒரே ஜில் ஜில் ஜிகாஜிகாதான்.. பொழிந்து வரும் பனியை கண்டு நடுங்கி வருகிறார்கள் பொதுமக்கள்!
கடந்த ஒரு மாதமாகவே ஊட்டியில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. காலையில் 8 மணி ஆனால் கூட வெளியில் யாரும் வருவதில்லை.
அப்படியே வெளியே வந்தாலும் எதிரே வரும் வண்டிகள் கூட கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனி கொட்டி வருகிறது. காலையில் ஆரம்பித்து இரவு வரை நாளெல்லாம் வண்டிகளில் லைட் போட்டு கொண்டு போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலைகள், செடிகள்
கருப்பு நிற தார் ரோடுகள் முழுவதும் வெண்பனியால் நிறைந்து கிடக்கிறது. பசுமை இலைகளும், செடிகளும்கூட கருகி காய்ந்து போய் உள்ளன. இப்படிதான் வேலூர் மாவட்டத்திலும் பனிப்பொழிவு இருக்கிறது. மாலை 5 மணிக்கு மேலும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. அதேபோல, மாலை 5 மணிக்கு பனிப்பொழிவு இன்னும் அதிகமாகி விடுகிறது.

குளிர் காய்கிறார்கள்
முடங்கி கிடக்கும் பொதுமக்கள் சூரியன் எப்போ வரும் காத்திருந்த பிறகே காலையில் வெளியே வருகிறார்கள். பனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வேலூர் மக்கள் நடுரோடுகள், நடுத்தெருக்கள், மற்றும் தங்கள் வீட்டுக்கு முன்னாடியே பழைய பொருட்களை கொளுத்திவிட்டு குளிர் காய்கிறார்கள்.

கண்ணாடி போல நீர்
கொடைக்கானல் முழுவதுமே மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வருகிறார்கள் என்றால் அங்குள்ள ஏரிகளில் உறைந்து கிடக்கும் தண்ணீரும் இயல்பு நிலைக்கு வரவில்லை. அப்படியே ஆடாமல் அசையாமல் கண்ணாடி போல உறைந்து உள்ளது.

சென்னைவாசிகள்
இதை தவிர மதுரை, சென்னை போன்ற அனல் கொளுத்தும் மாவட்டங்களிலும் மக்கள் குளிரை அனுபவித்து வருகிறார்கள். சாயங்காலம் ஆனாலே ஸ்வெட்டர்களை போட்டுக் கொள்ளும் நிலைமை சென்னைவாசிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

கால்நடைகள்
ஒட்டுமொத்தமாக, தமிழகம் முழுவதுமே ஜில்லென்ற குளிர் காற்று வீசி வருவதுடன், பனிப்பொழிவை சாரல்போல கொட்டி வருகிறது. மனிதர்களே கதி கலங்கி போகிறார்கள் என்றால், விலங்குகள், கால்நடைகளின் நிலைமையோ இன்னும் பரிதாபம்.

சந்தடி சாக்கு
மாநிலம் முழுவதும் பனிப்பொழிவு சிறு தூரல் போல கொட்டி வருவதால் ஸ்வெட்டர்கள், சால்வைகளின் விற்பனை சந்தடி சாக்கில் சூடு பிடித்து வருவதுடன், குளிருக்கு டீக்கடைக்கடைகளை நோக்கி பெரும்பாலானோர் படையெடுத்து வருகின்றனர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications