Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோடநாடு கொலை.. கனகராஜ் மர்ம மரணம்.. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மகனுக்கு சிபிசிஐடி சம்மன்

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: கோடநாடு கொலை வழக்கு விசாரணைக்காக ஆஜராகுமாறு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகனுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. கனகராஜ் விபத்தில் மரணமடைந்தது தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரியின் மகனிடம் வரும் 28ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ளது கோடநாடு எஸ்டேட். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரைக்கும் இங்குதான் ஓய்வெடுக்க வருவார். ஜெயலலிதா மறைந்த பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், அந்த எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

Kodanadu murder case: CBCID summons ex-IPS officers son

கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளை போனது என்ன? எதற்காக கொள்ளை நடந்தது அதற்கான சூத்திரதாரி யார் என்பதில் பல மர்மங்கள் உள்ளன. இப்போது கோடநாடு பங்களா கொள்ளை தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்று அதிமுகவில் இருந்தே குரல்கள் எழுந்துள்ளன.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு 5 ஆண்டுகளாக உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ், ஜித்தின்ஜாய், அரசு தரப்பில் வக்கீல் ஷாஜகான், கனகராஜ், சிபிசிஐடி கூடுதல் எஸ்பி முருகவேல் தலைமையில் போலீசார் ஆஜராகினர். விசாரணை நடத்திய நீதிபதி ஸ்ரீதரன் வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து அரசு வக்கீல் ஷாஜகான் கூறுகையில், கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 189 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதுபற்றி நீதிமன்றத்தில் தெரிவித்தோம். இது சம்பந்தமாக ஆய்வுக்கு அனுப்பப்பட்ட சிடிக்கள், செல்போன்கள், தொலை தொடர்பு சாதனங்கள் குறித்த விவரங்களும் தெரிவிக்கப்பட்டது. ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ள விவரங்களை விசாரணைக்காக கேட்டுள்ளோம். அதனை நீதிமன்றம் வழங்கினால், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளிகளிடம் விசாரணை என்ற பெயரில் யாரையும் கைது செய்யவில்லை. சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விசாரணை நடைபெற வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார் என்றும் கூறினார். இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் சிக்கியபோது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகன் சிவகுமார் அவசர உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் , அடுத்த வாரம் 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிவகுமாருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+