ஊட்டியில் மர்ம காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு.. விசாரணை ஆரம்பம்

ஊட்டியில் மர்ம காய்ச்சலுக்கு இளம் பெண் உயிரிழந்தார்.

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: மர்ம காய்ச்சல் காரணமாக ஊட்டியில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பிங்கர்போஸ்ட் அருகே வசித்து வருபவர் பானு. வயது 34. இவரது கணவர் சாதிக் அந்த பகுதியில் மளிகை கடை ஒன்றினை வைத்திருக்கிறார். 2 இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.

பனிப்பொழிவு

பனிப்பொழிவு

ஊட்டியில் சென்ற மாதம் முழுவதும் கொட்டி தீர்த்தது. தற்போது கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 24-ந் தேதி பானுவுக்கு காய்ச்சல் ஏற்படவே அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்.

தனியார் மருத்துவமனை

தனியார் மருத்துவமனை

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் காய்ச்சல் குறையவே இல்லை. இதனால் பதட்டமடைந்த உறவினர்கள் பானுவை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர்.

உயிர் பிரிந்தது

உயிர் பிரிந்தது

அங்கு பானுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது மெதுவாக பானுவுக்கு காய்ச்சல் குணமாக தொடங்கியது. இதையடுத்து, 2 தினங்களுக்கு முன்பு அவர் வீடு திரும்பினார். ஆனால் வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே பானுவுக்கு மீண்டும் காய்ச்சல் அதிகமானது. மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் பானு உயிர் பரிதாபமாக பிரிந்தது.

விசாரணை ஆரம்பம்

விசாரணை ஆரம்பம்

இதுகுறித்து மருத்துவர்கள் சொல்லும்போது, பானுவுக்கு டெங்குவும் இல்லை, பன்றி காய்ச்சலும் இல்லை. எதனால் அவர் இறந்தார் என்றும் தெரியவில்லை. ஆரம்பத்திலேயே அலட்சியப்படுத்தாமல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என்றனர். எனவே பானு எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+