கொடநாடு வழக்கு! "குஜராத்திற்கு அனுப்பப்பட்ட கனகராஜ் மொபைல்!" நீதிமன்றத்தில் சிபிசிஐடி சொன்ன மேட்டர்
நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நீலகிரி செசன்ஸ் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் சிபிசிஐடி தரப்பில் வழக்கறிஞர் முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரியை அடுத்துள்ள கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களா ஒன்று அமைந்துள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை கோடைக் காலங்களில் இங்கே சென்று ஓய்வெடுப்பது வழக்கம்.

ஜெயலலிதா இருந்த வரை இது குட்டி தலைமைச் செயலகம் போலவே செயல்பட்டதாகக் கூட கூறுவார்கள். அந்தளவுக்குத் தமிழக அரசியலில் முக்கியமான இடமாக இருந்த கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா இறந்த பிறகு மோசமான சம்பவங்கள் அரங்கேறின.
கொடநாடு சம்பவம்: கடந்த 2017ஆம் ஆண்டு இந்த கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. சேலம் அடுத்துள்ள ஆத்தூரை சேர்ந்த கனகராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து இந்த சம்பவத்தைச் செய்ததாகக் கூறப்பட்டது.
அங்கிருந்த விலையுயர்ந்த வாட்ச்களை அவர்கள் கொள்ளையடிக்கச் சென்றதாகவும் போலீசார் தரப்பில் அப்போது கூறப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேரைக் கேரளா போலீசார் கைது செய்தனர்.
சிபிசிஐடி விசாரணை: இந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நீலகிரி செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இடையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் 49 பேர் அடங்கிய குழு இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறது. கடந்த அக். 8ஆம் தேதி இந்த வழக்கு விசாரணையின் போது சிபிசிஐடி போலீசார் இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.
இதற்கிடையே அக்.13ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கனகராஜின் செல்போன் இருப்பிடம், அவர் எந்தெந்த எண்களுக்குப் பேசியிருந்தார் என்பது குறித்த தகவல்களைச் சேகரித்து வருவதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். அப்போது வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அப்துல் காதர், அந்த எண்கள் யாருடையது, ஆய்வுக்கு எங்கே அனுப்பப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.
மீண்டும் விசாரணை: குஜராத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்த சிபிசிஐடி, நீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கோரினர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை ஒத்தி வைத்திருந்தார். இதற்கிடையே அந்த வழக்கு இன்று மீண்டும் நீலகிரி செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 159 பேரிடம் வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தனர். அதேநேரம், குஜராத் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட செல்போன் தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அந்தத் தகவல்கள் கிடைத்தால் விசாரணையில் பெரியளவில் உதவியாக இருக்கும் என்றும் சிபிசிஐடி தரப்பில் கூறப்பட்டது.
மேலும், செல்போன் தகவல்கள் கிடைக்காத நிலையில், விசாரணைக்குக் கூடுதல் அவகாசத்தை சிபிசிஐடி போலீசார் கோரினர். இதை ஏற்ற நீதிபதி வழக்கு விசாரணையை ஜன.5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications