டெல்லியில் இருந்து ஊட்டி வந்தார்.. 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட திமுக எம்பி ஆ ராசா

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: டெல்லியிலிருந்து ஊட்டிக்கு வந்த திமுக எம்பி ஆ ராசா, தன்னைத்தானே 7 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டார்.

கொரோனா பரவல் தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் பொது போக்குவரத்து முடங்கியது. தற்போது இந்தியா முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு நிலை தொடங்கியுள்ளது.

Nilgiris DMK MP A Raja isolates himself in Ooty

இந்த நிலையில் டெல்லியில் நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடியும் போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திமுக எம்பி ஆ ராசாவால் தமிழகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டன.

இதையடுத்து 1ஆம் தேதி முதல் பஸ், ரயில், விமான போக்குவரத்து நாடு முழுவதும் தொடங்கியது. இதையடுத்து நேற்று காலை விமானம் மூலம் ஆ ராசா எம்பி கோவைக்கு வந்தார். அங்கு அவர் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் காரில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார். வெளியூரில் இருந்து வந்ததால் அவர் தன்னைத் தானே 7 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதையடுத்து ஆ ராசா ஊட்டிக்கு வந்ததை அறிந்த சுகாதாரத் துறையினர் அவருக்கு காய்ச்சல் இருக்கிறதா என சோதனை செய்துவிட்டு அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான ஸ்டிக்கரையும் ஒட்டினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+