பட்டா நிலத்தில் "விழுந்த" யானை.. மகிழும் மசினிகுடி.. நன்றியில் நீலகிரி.. கலக்கறாங்களே சுப்ரியா சாஹூ
நீலகிரி: நீலகிரியில் மயங்கி விழுந்த யானைக்கு தீவிர சிகிச்சை தரப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்தபடியே உள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், ஒரு யானை இறந்துவிட்டது.. வயோதிகம் காரணமாக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், அந்த யானை உயிரிழந்தது. எனினும், இறந்துபோன தாய் யானையிடம் பாச போராட்டம் நடத்தியது அதன் குட்டி யானை..

சத்தியமங்கலம்: இதையடுத்து, தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தன்னுடைய வருத்தத்தை பதிவிட்டிருந்தார்.. "அந்த தாய் யானை இறந்துவிட்டது, அனுபவம் வாய்ந்த 4 கால்நடை மருத்துவர்கள் அந்த யானைக்கு சிகிச்சை அளித்தும், அதன் உயிரை காக்க அத்தனை முயற்சிகள் எடுத்தும் கடைசியில் அது பலனளிக்கவில்லை. எங்கள் மனம் வேதனையடைந்துள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
அத்துடன், காடுகளில், வனப்பகுதிகளில் உள்ள விலங்குகளின் வாழ்க்கை போராட்டங்கள் குறித்தும், மிக விரிவாகவே விளக்கம் ஒன்றை அப்போது சுப்ரியா சாஹூ தந்திருந்தார்.
Kudos to the team at the Mudumalai Tiger Reserve which worked hard to revive an ailing young tusker. The tusker was treated by experienced Vets for exhaustion and dehydration. The young guy could not only get enough strength to stand up on his feet but also chased the treatment… pic.twitter.com/FhKZsvedqj
— Supriya Sahu IAS (@supriyasahuias) April 5, 2024
நீலகிரி மாவட்டம்: இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கோடைகாலம் துவங்கிவிட்டதால், கூடலூரை அடுத்துள்ள முதுமலை சுற்றுவட்டார வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி தற்போது நிலவுகிறது. எனவே, உணவு மற்றும் தண்ணீர் தேடி 6 வயது யானை குட்டி ஒன்று, மசினகுடி அருகே உள்ள தனியார் பள்ளி அருகே வந்தது.
அந்த யானை குட்டி பார்ப்பதற்கே மிகவும் சோர்வாக இருந்தது.. வெப்பம் கொளுத்தியதால், அந்த யானைக்குட்டியால் நடக்க முடியவில்லை.. பிறகு, திடீரென நடக்கமுடியாமல் மயங்கி விழுந்துள்ளது.
பட்டா நிலம்: பிறகு, மசினகுடி அருகே தனியார் பட்டா நிலத்தில், யானைக்குட்டி உடல் நலம் பாதிக்கப்பட்டுப் படுத்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வனத்துறையினரும் கால்நடை டாக்டர்களுடன் விரைந்து வந்தார்கள்.. யானைக்குட்டியை பரிசோதித்து பார்த்ததில், அதற்கு நீர்சத்து குறைவாக இருந்தால் மயங்கி விழுந்திருப்பது தெரியவந்தது... உடனே, சுமார் 2 மணி நேரமாக யானைக்கு சிகிச்சை தந்தனர்..
நீர்சத்து நிறைந்த உணவுகள் பால் மற்றும் அத்தியாவசிய மருந்துகளையும் வழங்கினார்கள்.. பிறகு வனத்துறையினர் அங்கிருந்து செல்லாமல், குட்டியானையின் உடல் நிலையை கிட்டத்தட்ட 3 மணி நேரமாக கண்காணித்தபடியே இருந்தனர்..
யானை சோர்வு: பிறகு எல்லாரும் ஒன்றுசேர்ந்து, யானையை தள்ளி தள்ளி எழுப்பினார்கள்.. அந்த யானை கண் விழித்து பார்த்ததுமே, மருத்துவ சிகிச்சை தந்த குழுவினரையே துரத்த ஆரம்பித்தது.. ஆனால், மெல்ல மெல்ல வனப்பகுதிக்குள் தானாகவே சென்றுவிட்டது. எனினும், சிகிச்சை அளித்த காட்டு யானையை, வனத்துறையினர் தனிக்குழு அமைத்து தொடர்ந்து கண்காணித்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு தமிழ்நாடு வனத்துறை தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, தன்னுடைய பாராட்டுக்களை வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "முதுமலை புலிகள் சரணாலயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளம் யானையை உயிர்ப்பிக்கக் கடுமையாகப் போராடிய குழுவினருக்குப் பாராட்டுக்கள். சோர்வு மற்றும் நீரிழப்புக்கு அனுபவம் வாய்ந்த கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நடமாட்டம்: அதன்பின் யானை எழுந்து நின்று சிகிச்சை அளித்த குழுவினரைத் துரத்தி விட்டு மீண்டும் காட்டுக்குள் சென்றது. யானை நடமாட்டத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். முதுமலை வனத்துறை மற்றும் யானைக்குச் சிகிச்சை அளித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications