வாட்டிய தனிமை.. அதிகரித்த மன அழுத்தம்.. 21 வயசுதான்.. 3வது மாடியிலிருந்து குதித்து.. கொடுமை!

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: இத்தாலியில் டாக்டருக்கு படிக்கபோன ஊட்டி இளைஞர், 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. தனிமையும் மன அழுத்தமும் 21 வயசு மாணவனை கொன்றேவிட்டது!

நீலகிரி மாவட்டம், கீழ்க்கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் சதானந்த்... இவர் ஒரு தேயிலை விவசாயி. இவரது மகன் பிரதிக்ஷ்.. 21 வயதாகிறது.. இத்தாலியிலுள்ள ஒரு மெடிக்கல் காலேஜில் படித்து வருகிறார்.. இது 3-ம் வருடம்.

nilgiris medical student committed suicide in italy due to depression

இப்போது லாக்டவுன் என்பதால் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.. இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் திடீரென 3-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த தகவலை கேட்டு கதறி துடித்து அழுதனர்.. இந்த மாணவனின் அண்ணன், இத்தாலியிலுள்ள ஒரு தனியார் கம்பெனியில் கெமிக்கல் இன்ஜினீயராக வேலை பார்த்து வருகிறாராம்.. அவர் வீட்டுக்கும் இவரது ரூமுக்கும் கிட்டத்தட்ட 50 கிமீ தூரம் இருக்குமாம்.. அதனால் தனியாகவே பிரதிக்‌ஷ் காலேஜ பக்கத்திலேயே ரூம் எடுத்து தங்கி படித்து வந்திருக்கிறார்.

தற்போது இத்தாலியில் கொரோனா அதிகமாக இருக்கவும், எல்லா மாணவர்களும் கிளம்பி சொந்த நாட்டுக்கு சென்றுவிட்டனர்.. பிரதிக்‌ஷ் மட்டுமே இந்தியாவை சேர்ந்தவர்.. அவரால் அங்கிருந்து கிளம்பி வரவும் முடியவில்லை.. அதனால் ரூமுக்குள்ளேயே இருந்திருக்கிறார்.. தொடர்ந்து ஒரே ரூமுக்குள் அடைந்து கிடந்ததால், மன அழுத்தம் அதிகமாகிவிட்டது.

இந்த விஷயம் அவரது அண்ணனுக்கு மெதுவாகத்தான் தெரிந்தது.. எனினும் உடனடியாக தம்பியை அழைத்து கொண்டு அங்கிருந்த ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.. கிட்டத்தட்ட ஒரு மாதம் சிகிச்சை தந்துள்ளனர்.. பின்னர் அண்ணன் வீட்டில் இருந்தபடியே ஒரு பக்கம் ஆன்லைனில் படிப்பும் இன்னொரு பக்கம் சிகிச்சையும் நடந்து வந்துள்ளது.

கடந்த 10-ம் தேதி தன் அப்பாவுடன் வீடியோ காலில் பேசும்போதுகூட, ரொம்ப மன அழுத்தம் உள்ளதாகவும் வரும் 13-ம் தேதி அதாவது இன்றைய தினம், இந்தியா வருவதாகவும் சொல்லி உள்ளார். ஆனால் என்ன ஆச்சோ தெரியவில்லை.. போனை கட் பண்ண அடுத்த சில நிமிடங்களில், அண்ணன் வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவரது சடலம் இந்தியா கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.. டாக்டருக்கு படிக்க போன மாணவன், இப்படி திடீர் தற்கொலை செய்து கொண்டது நீலகிரியை மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+