ஊட்டி: 5 சிறுமிகளுக்குத் துரோகம் செய்த முன்னாள் காவலருக்குச் சாகும் வரை சிறை
ஊட்டி: குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியவரே குற்றவாளியானால்? ஊட்டியில் 5 சிறுமிகள் தொடர்பான வழக்கில், நீலகிரி மகிளா நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை ஒரு "ஹீரோ" போலக் காட்டி, ஏற்கனவே திருமணமானதை மறைத்து, ஒவ்வொரு சிறுமியிடமும் "உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று ஆசை வார்த்தை கூறி தனித்தனியாக ஏமாற்றியுள்ளார் ஊர்க்காவல் படை/வேட்டை தடுப்பு காவலர் உமேஸ்வரன்.
நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த 26 வயது பட்டதாரி வாலிபர் உமேஸ்வரன். இவர் சாதாரணமானவர் கிடையாது.. ஊர்க்காவல் படையிலும், வேட்டை தடுப்பு காவலராகவும் பணியாற்றியவர். அதாவது சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்தவர் தான் உமேஸ்வரன். ஆனால், இவர் தனது பெட்டிக்கடைக்கு வரும் 10-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவிகளைக் குறிவைத்திருக்கிறார்.

தன்னை ஒரு "ஹீரோ" போலக் காட்டி, ஏற்கனவே திருமணமானதை மறைத்து, ஒவ்வொரு சிறுமியிடமும் "உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று ஆசை வார்த்தை கூறி தனித்தனியாக ஏமாற்றியுள்ளார். ஒரு மாணவியுடன் இருக்கும் தொடர்பு மற்றவருக்குத் தெரியாதபடி மிகக் கச்சிதமாக துரோகம் செய்திருக்கிறார் உமேஸ்வரன்..
இந்தக் கொடுமை கடந்த ஆண்டு வெளிச்சத்திற்கு வந்ததும், பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டம் பாய்ந்தது. பொதுவாக இது போன்ற வழக்குகள் பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படும். ஆனால், இந்த வழக்கில், குன்னூர் மகளிர் போலீசார் மிகத் துல்லியமான ஆதாரங்களைத் திரட்டினார்கள்.
அரசு தரப்பு வழக்கறிஞர் பாதிக்கப்பட்ட மாணவிகளின் தரப்பில் வலுவான வாதங்களை முன்வைத்தார். இதனால் வெறும் ஓராண்டிற்குள் அனைத்து விசாரணைகளையும் முடித்து, "சாகும் வரை ஆயுள் தண்டனை" என்ற மரண அடி போன்ற தீர்ப்பை ஊட்டி நீதிமனற்ம் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் நாம் அறிய வேண்டியது. பெட்டிக்கடைக்கோ அல்லது ரீசார்ஜ் செய்யவோ அல்லது வேறு எதற்காகவே பிள்ளைகளை வெளியே அனுப்பும்போது, அவர்கள் யாரிடம் பழகுகிறார்கள் என்பதில் ஒரு கண் இருக்க வேண்டும். பெண் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசி, அவர்களிடம் ஒளிவு மறைவு இல்லாமல் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துங்கள்.
நம் பெற்றோர் நமக்காக எந்த நிலையிலும் உடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.. மாறாக எது நடந்தாலும் சொல்வதற்கு பயப்படும் நிலையை ஏற்படுத்திவிடார்கள்.. அதே சமயம், தப்பு செய்தவன் எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், "சட்டம் தன் கடமையைச் செய்யும்" என்பதற்கு இந்த ஊட்டி மகிளா நீதிமன்றத் தீர்ப்பு ஒரு மாபெரும் சாட்சியாக அமைந்துள்ளது.














Click it and Unblock the Notifications