இன்று நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி.. என்னென்ன நிகழ்ச்சிகள் தெரியுமா? முழுவிபரம்
நீலகிரி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னையில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இரவில் அவர் கர்நாடகா மாநிலம் மைசூர் சென்ற நிலையில் இன்று 2வது நாளாக தமிழகம் வருகிறார். நீலகிரி மாவட்டத்தில் விசிட் செய்யும் பிரதமர் மோடியின் முழு நிகழ்ச்சி பட்டியல் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்தார். சென்னையில் சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம், சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அதன்பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

மெரினா அருகே விவேகானந்தர் இல்லத்தில் நடந்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் 125ஆவது ஆண்டுவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன்பிறகு சென்னை பல்லாவரம் அருகே உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று புதிய ரயில் திட்டம், சாலை திட்டம், கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலங்களை திறந்து வைத்தார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.
அதன்பிறகு அங்கு பிரதமர் மோடி பேசினார். இதையடுத்து சென்னையில் இருந்து இரவில் பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் கர்நாடகா மாநிலம் மைசூர் சென்றடைந்தார். மைசூரில் ஓய்வெடுத்த பிரதமர் மோடி இன்று காலை காலை 7 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்திற்கு செல்கிறார். அங்கு அவர் வனப்பகுதிக்குள் வாகன சவாரி செல்கிறார்.
இதையடுத்து அவர் ராணுவ ஹெலிகாப்டரில் தமிழ்நாடு வருகிறார். காலை 9.35 மணிக்கு நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்‛ ஆவணப்படத்தில் தோன்றிய பொம்மன்-பெள்ளி தம்பதியை அவர் சந்திக்கிறார். அவர்களின் பேசும் பிரதமர் மோடி இருவரையும் கவுரப்படுத்த உள்ளார்.
அதன்பிறகு தேசிய புலிகள் காப்பகத்தில் சிறப்பாக பணியாற்றிய கள இயக்குனர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார். இதுதவிர முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மூத்த மூன்று யானை பாகன்களை சந்திப்பதோடு யானைகளுக்கு உணவளிக்க உள்ளார். மேலும் புலியை பிடிப்பதில் திறமையாக செயல்பட்ட வேட்டை தடுப்பு காவலர்களை பிரதமர் மோடி சந்தித்து பாராட்டு தெரிவிக்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் பிரதமர் மோடி முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து மசனகுடிக்கு சாலை மார்க்கமாக காரில் செல்கிறார். அதன்பிறகு அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் கர்நாடகா மாநிலம் மைசூருக்கு செல்ல உள்ளார். பிரதமர் மோடியின் வருகைையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
******
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!












Click it and Unblock the Notifications