ஊட்டியில் கஞ்சா விற்ற காவலர்.. அட்டப்பாடி டூ நீலகிரி.. சீக்ரெட் அம்பலமானது எப்படி?
ஊட்டி: நீலகிரி மாவட்டம் உதகையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த போக்குவரத்து காவலர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா விற்றதாக காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கஞ்சாவை அட்டப்பாடியில் இருந்து எப்படி நீலகிரிக்கு கொண்டு வந்தார், எவ்வளவு காலமாக இவ்வாறு செயல்பட்டிருக்கிறார் என்று தீவிரவிசாரணை நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்த குரூஸ் (26) என்ற இளைஞர் கடந்த 21ம் தேதி உதகையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விற்பனை செய்ய எங்கிருந்து கஞ்சா கொண்டு வரப்படுகிறது என காவல்துறையினர் குரூஸிடம் நடத்திய விசாரணையில் உதகை நகர போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வரும் நசீர் அகமது(26) என்பவரிடம் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தான் கஞ்சா விற்பது தொடர்பான விஷயம் காவல்துறையினருக்கு தெரிந்து விட்டதால் காவலர் நசீர் முகமது தலைமறைவானார். அவரை 3 தனிப்படைகள் அமைத்து கோவையில் வைத்து கைது செய்து காவல் துறையினர் உதகை அழைத்து வந்தனர். பின்னர் உதகை நகர காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்தனர்.
விசாரணையில் கேரள மாநிலம் அட்டப்பாடி அருகேயுள்ள கோட்டதொரை பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் என்ற கஞ்சா வியாபாரியிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து நீலகிரியில் விற்பனை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து உதகை நகர மத்திய காவல் நிலைய போலீசார் அட்டபாடி அருகே உள்ள கோட்டதொரைக்கு விரைந்தனர். அங்கு மோகனசுந்தரத்தை கைது செய்தனர். பின்னர் அவரது இருப்பிடத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில் 17 கிரோ கஞ்சா சிக்கியது. கஞ்சா வியாபாரியை உதகை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இதனிடையே கடந்த 21ம் தேதி நடந்த கஞ்சா விற்பனை தொடர்பான தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு முறையாக தெரிக்காத உதகை நகர போக்குவரத்து உதவி ஆய்வாளர் அருண் கூடலூருக்கும், உதகை நகர மத்திய காவல் நிலைய தனிபிரிவு காவலர் ஜெயகுமாரை தேவாலா காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி., நிஷா உத்தரவிட்டுள்ளார்.
கஞ்சா விற்றதாக காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கஞ்சாவை அட்டப்பாடியில் இருந்து எப்படி நீலகிரிக்கு கொண்டு வந்தார், எவ்வளவு காலமாக இவ்வாறு செயல்பட்டிருக்கிறார், கஞ்சா வியாபாரிகளிடம் கொடுத்து விற்பனை செய்துள்ளரா அல்லது தாேன விற்பனை செய்தாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கஞ்சா விற்பனையில் மேலும் சில காவலர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்கள் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications