ராத்திரி நேரத்தில் குன்னூரில் கூல் வாக்கிங் போகும் கரடி.. திகிலில் மக்கள்!
குன்னூரில் இரவில் கரடி நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
Recommended Video

ஊட்டி: ராத்திரி நேரங்களில் கூலாக நடமாடி வரும் கரடியை நினைத்துதான் குன்னூர் மக்கள் பயத்தில் உறைந்திருக்கிறார்கள்
ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. தேயிலை தோட்டப்பகுதிகளுக்குள் மட்டும் புகுந்து அட்டகாசம் செய்து வந்த கரடிகள் தற்போதும் ஊருக்குள்ளும் புகுந்து வருகிறது.

எண்ணெய் குடித்துவிடும்
அப்படி ஊருக்குள் புகுந்து கரடிகள் பூட்டியிருந்த கடைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி விடுகிறது. மேலும் கோயில்கள் எங்காவது தெரிந்தால் அந்த கோயிலுக்குள்ளும் நுழைந்துவிடுகிறது. கோயிலினுள் ஏற்றி வைத்திருக்கும் விளக்குகளையும் கீழே தள்ளி விடுவதுடன், அந்த விளக்குகளில் உள்ள எண்ணெய்களையும் முழுசும் குடித்துவிட்டு பிறகுதான் நடையை கட்டுகிறது.

கூல் கரடி
இதையெல்லாம் பார்த்து ஏற்கனவே பீதியில் மக்கள் இருக்கிறார்கள். இந்தநிலையில் குன்னூரில் கரடி நடமாட்டம் அதிகமாக தென்பட்டு வருகிறது. குறிப்பாக குன்னூர் அருகேயுள்ள சேலாஸில் கரடி நடமாடி கொண்டிருந்தது. இந்த சேலாஸ் என்பது ஒரு பஜார் வீதி. இந்த பஜாரில் ராத்திரி 10.30 மணிக்கு கரடி ஒன்று கூலாக நடந்து போய் கொண்டிருப்பதை பார்த்ததும் அந்த பக்கமாக வாகனங்களில் வந்தவர்கள் எல்லோரும் ஷாக் ஆகி நின்றுவிட்டார்கள்.

ஆடி அசைந்து போனது
அந்த கரடி எந்த பக்கம் போகிறதென்றே தெரியவில்லை. திடீரென்று நேராக போகிறது, பிறகு குறுக்கால போகிறது என்பதால் நிமிஷத்துக்கு நிமிஷம் வாகன ஓட்டிகளுக்கு பல்ஸ் எகிறி கொண்டு போனது. ஆனால் நம்ம மக்கள் எவ்வளவு பீதி இருந்தாலும் அதை ஒரு பக்கம் ஓரமா வெச்சிட்டு செல்போனில் கரடி நடமாட்டத்தை படம்பிடித்தார்கள். கடைசியாக ஆடி அசைந்து கரடி போய்விட்டது உறுதியாக அறிந்த பின்னரே வாகன ஓட்டிகள் அங்கிருந்து நகர்ந்தார்கள்.

நடுங்கும் மக்கள்
ஆனால் தற்போதுவரை சாலையை கடக்கும்போதெல்லாம் அச்சத்துடன்தான் கடந்து வருகிறார்கள். மக்களை யாரையும் தாக்கி விடுவதற்கு முன்னாலேயே அந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை பலமாக எழுந்துள்ளது. மீண்டும் அந்த ஒத்தை கரடி எப்ப வருமோ என்று குளிரையும் தாண்டி குன்னூர் மக்கள் நடுங்கி கொண்டிருக்கிறார்கள்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications