சயான், மனோஜ் ஜாமீன் ரத்தாகுமா?.. 8ம் தேதி ஊட்டி கோர்ட் தீர்ப்பு
சயான், மனோஜ் ஜாமீன் மீதான விசாரணையை ஊட்டி கோர்ட் தள்ளி வைத்துள்ளது.
ஊட்டி: கொடநாடு விவகாரத்தில் கைதாகி உள்ள சயான், மனோஜ் இருவரின் ஜாமீனை ரத்து செய்ய கோரும் வழக்கின் விசாரணையை வரும் 8ம் தேதிக்கு உதகை மாவட்ட கோர்ட் நீதிபதி ஒத்தி வைத்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் 2017-ம் ஆண்டு நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த காவலாளியை கொலை செய்து விட்டு விலை உயர்ந்த பொருட்களையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சயான், மனோஜ் உள்ளிட்டவர்களை கைது செய்தனர். இதில், சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த ஜாமீன் வரும் 2-ம் தேதி வரை இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் மனு
ஆனால் இவர்கள் 2 பேரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆதாரமற்ற புகார்களை கூறி வருவதால் இவர்களின் ஜாமீனை ரத்து செய்ய கோரி ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இன்று ஆஜர்
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி வடமலை, சயான், மனோஜ் இருவரும் வருகிற 29-ந்தேதி அதாவது இன்றைய தினம் சயான், மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

ஒத்தி வைப்பு
அதன்படி, கடந்த 29-ம் தேதி இருவரும் ஆஜரான நிலையில், இந்த வழக்கின் விசாரணை 2-ம் தேதிக்கு அதாவது இன்றைய தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று காலை மீண்டும் இருவரும் ஊட்டி கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது அரசு சார்பில் ஏ.நடராஜனும் எதிர் தரப்பு சார்பில் பிரபாகரனும் ஆஜராகி வாதாடினர்.

நீண்ட வாக்குவாதம்
சயான், மனோஜ் ஆகியோர் ஊட்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானதையொட்டி அனைத்து அரசு தரப்பு வழக்கறிஞர்களும் முன்கூட்டியே ஆஜராகியிருந்தனர். அதேபோல, நீதிமன்ற வளாகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பலத்த பாதுகாப்பு
சயான், மனோஜ் ஆகியோர் ஊட்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானதையொட்டி அனைத்து அரசு தரப்பு வழக்குரைஞர்களும் முன்கூட்டியே ஆஜராகியிருந்தனர். அதேபோல, நீதிமன்ற வளாகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications