’புது வெள்ளை மழை பொழிகிறது’ ஊட்டியில் கடும் குளிர்.. உறைபனியால் சுற்றுலா பயணிகள் திண்டாட்டம்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடும் குளிர் நிலவி வருகிறது. வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியஸாக பதிவானதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உறைபனி காலம் தொடங்கியுள்ளதால் உறைபனியால் ஊட்டியின் பல்வேறு பகுதிகள் காஷ்மீர் போல் காட்சியளிக்கின்றன. உதகையிலும் சுற்றுலா வந்த பயணிகள் தங்கும் விடுதியை விட்டு வெளியே வராமல் உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
தமிழகத்தில் மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் இடம் ஊட்டி. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஊட்டி தமிழகத்தில் சிறந்த கோடைவாசஸ்தலமாக உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 7,347 அடி உயரத்தில் உள்ள ஊட்டியில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் உறைபனி ஏற்படும். நீர்பனி தொடங்கிய அடுத்த ஒரு சில வாரங்களில் உறைபனி தொடங்கும்.

ஊட்டியில் உறைபனி
இந்த ஆண்டு கடந்த நவம்பர் மாதமே நீர்பனி தொடங்கிய நிலையில், மழைப்பொழிவு இருந்ததால் உறைபனி ஏற்படுவது கொஞ்சம் தாமதம் ஆனது. எப்போதும் ஊட்டியில்தான் உறைபனி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஊட்டியை அடுத்த மஞ்சூர் மற்றும் குன்னூர் பகுதிகளில் உறைபனி தொடங்கியது. நேற்று முன்தினம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில இடங்களில் உறைபனி தொடங்கியது.
தாமதமாக தொடங்கினாலும் கடும் குளிர் நிலவியது. அரசு தாவரவியல் பூங்காவில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பகுதியில் 2 டிகிரி செல்சியஸ் ஆகவும், காந்தல் மற்றும் தலைக்குந்தா பகுதியில் ஜீரோ டிகிரி செல்சியஸ் ஆகவும், மஞ்சூரை அடுத்த அவலாஞ்சி பகுதியில் மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் ஆகவும் வெப்பநிலை பதிவானது.

வெண்போர்வை போர்த்தியது போல
இதன் காரணமாக ஊட்டி நகரில் குதிரை பந்தய மைதானம், காந்தல், தலைக்குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கடும் உறைபனி நிலவியது. காஷ்மீரில் காணப்படுவது போல பனி உறைந்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் இதமான தட்வெப்ப நிலையை ரசித்தனர். நிறுத்திவைக்கப்பட்ட கார்களில் பனி உறைந்தன. புல்வெளிகளில் வெண்போர்வை போர்த்தியது போல எங்கும் வெண்மையாக காட்சியளித்தது.
இயல்பு வாழ்க்கை முடங்கியது
கார்கள் மீது விழுந்திருந்த உறைபனி வெள்ளை பஞ்சுகள் போல் காணப்பட்டது. இருசக்கர வாகன இருக்கைகள் மீதும் உறைபனி நிறைந்து இருந்தது. குளிர் பாதிப்பை சமாளிக்க பொதுமக்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். கடும் குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் நிலவும் கடும் குளிர் காரணமாக சுற்றுலா பயணிகள் தாங்கள் தங்கியுள்ள ஹோட்டல்களிலேயே முடங்கியுள்ளனர்.

இதனால் காலையில் குளிரை சமாளிக்க ஸ்வொட்டர்கள் விற்பனைக்காக சாலையோரம் வைத்து இருந்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். கடைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. காலை 10 மணிக்கு மேல் உறைபனியின் தாக்கம் குறைந்தவுடன்தான் பணிகளை தொடர முடிவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications