உறைந்து போன குன்னூர்.. மனைவி, மகள், மகனை கொடூரமாக கொன்ற அசோக் பகத்.. பரபரப்பு கடிதம்!
ஊட்டி: குன்னூரில் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளி, தனது மனைவி, மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கொலக்கம்பை என்னும் கிராமம்.
இதன் அருகேயுள்ள கிரேக்மோர் பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

உறைய வைத்த சம்பவம்
இந்த பகுதியில், இன்று நடைபெற்ற ஒரு கொடூர சம்பவம், குளிரையும் தாண்டி, மக்களை அப்படியே உறைய வைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
அப்படி என்ன நடந்தது? ஏன் இந்த கொடூரம் நடந்தது என்று தெரியுமா. இதோ அந்த தகவல்கள்.

குடும்பத்தோடு வேலை
கிரேக்மோர் பகுதியில் உள்ள, 12 வது லைன் குடியிருப்பு பகுதியில் அசோக் பகத், அவரது மனைவி சுமதி குமாரி , 8 வயதுடைய மகன் அபே மற்றும் 4 வயது மகளான ரேஷ்மா ஆகியோர் இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். கணவரும், மனைவியும் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.

கழுத்தறுத்து, தண்ணீரில் மூழ்கடித்து
இந்நிலையில் அசோக் பகத் தனது மனைவியையும், மகனையும் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். பிறகு மகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். இப்படி கொடூரம் புரிந்த அசோக் பகத், பிறகு அவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

ஹிந்தி கடிதம்
மேலும், இவர் ஹிந்தி மொழியில் கடிதம் எழுதி, மனைவியின் சடலத்தின் மீது வைத்துள்ளார். தகவல் அறிந்து விரைந்த போலீசார் கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் போலீசார் குவிக்கப்பட்டதுடன், பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications