பனிப்பொழிவு குறையவே இல்லை.. குளிருது.. குளிருது.. ஊரே குளிருது.. நடுங்குகிறாள் மலைகளின் அரசி!
நீலகிரியில் உறைபனியின் தாக்கம் நீடிக்கும் என சொல்லப்படுகிறது.
ஊட்டி: குளிருது.. குளிருது.. ஊரே குளிருது என நடுங்கி கிடக்கிறாள் மலைகளின் அரசி! இன்னும் கொஞ்சம்கூட பனிப்பொழிவு குறையவே இல்லை. இப்போதைக்கு குறையவும் குறையாதாம்.
நீலகிரியில் எப்பவுமே அக்டோபர் மாதம் துவக்கத்திலேயே நீர்பனி விழ ஆரம்பித்துவிடும். இப்படியே ஒரு மாசத்துக்கு இருக்கும்.
அதன்பிறகு நவம்பர் மாத துவக்கத்தில் உறைப்பனி விழ ஆரம்பித்துவிடும். இது கிட்டத்தட்ட பிப்ரவரி மாசம் வரை நீடிக்கும்.

காலை முதல் இரவு வரை
ஆனால், எந்த வருஷமும் இல்லாமல் இந்த வருஷம் அதிக அளவு உறைபனி நீலகிரியில் காணப்படுகிறது. காலையில் இருந்து இரவு வரை பனி உறைபனி கொட்டி கொண்டே இருக்கிறது.

மக்கள் அவதி
2 மாதமாக பசும்புல்வெளிகள் எல்லாம் வெள்ளை போர்வையை இழுத்து போர்த்து கொண்டு சாவகாசமாக படுத்துவிட்டதைபோல பனிக்கட்டி தெரிகிறது. உள்ளூர் மக்கள் கூட வெளியில் தலைகாட்டுவதில்லை. பெரும்பாலானோர் ரொம்பவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

கருகும் பயிர்
கருகிவிட்ட பயிர்களால் விவசாயிகளின் நிலைமையோ பரிதாபத்துக்கு உரியதாகி விட்டது. அக்னி நட்சத்திரம் நடக்கும்போது சென்னை ரோடுகள் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது ஊட்டி ரோடுகளும். சுற்றுலா தளங்களும் வெறிச்தான்!

குளிர் போகாது
தமிழகத்தின் மற்ற பகுதிகளில் குளிர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்து கொண்டிருப்பது ஆறுதலாக இருந்தாலும் நீலகிரியில் இப்போதைக்கு குளிர் போகாது என நீர்வள ஆராய்ச்சி மையம் சார்பில் கூறப்படுகிறது.

நீடிக்கும்
அடுத்த மாதம் வரை உறை பனியின் தாக்கம் இருக்கும் என்றும், அதன்பிறகுதான் பனி குறையவே ஆரம்பிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அப்படியானால் மார்ச் மாதம்தான் ஓரளவு இயல்பு நிலை வரும். இருக்கும் குளிர் நடுக்கம் பத்தாது என்று மைனஸ் 4, மைனஸ் 5 டிகிரிகள் என காட்டி மாவட்ட மக்களை இன்னமும் நடுநடுங்க வைத்து வருகிறது!!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications