Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்? சிபிஐக்கு நீதிபதி கேள்வி!

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: கோடநாடு கொலை கொள்ளை வழக்கை இன்னும் முடிக்காதது ஏன் என்று ஊட்டி அமர்வு நீதிமன்றத்தின் புதிய நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, "சம்பவம் நடைபெற்ற சமயத்தில் சந்தேகப்படும்படியான நபர்களின் செல்போன் உரையாடல்கள் குறித்த தரவுகள் தேவைப்படுகின்றன. குஜராத்தில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்தில் இருந்து ஒலி நாடாக்கள் தொடர்பான ஆய்வு முடிவுகள் வர வேண்டியுள்ளன." என சிபிஐ தரப்பில் தெரிவித்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அடுத்த சில நாட்களில் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார்.

Kodanad Case

இதைத்தொடர்ந்து, அதே ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராக இருந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். பின்னர், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி கனகராஜ் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த கோடநாடு சம்பவத்தில் காவல்துறை 10 பேரை கைது செய்த நிலையில், தற்போது அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை, உதகை நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை 500க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று (மார்ச் 6) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வளையார் மனோஜ் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார். அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞர் கனகராஜ் மற்றும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் ஆகியோர் ஆஜராகினர். இன்று காலை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், "இந்த வழக்கை இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்?" என சி.பி.சி.ஐ.டி தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த சி‌பிசிஐடி தரப்பு அதிகாரிகள், இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி தரப்புக்கு மாற்றப்பட்டதில் இருந்து தற்போது வரை 269 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, அந்த தகவல்கள் வாக்குமூலங்களாகப் பெறப்பட்டுள்ளன.

மேலும், சம்பவம் நடைபெற்ற சமயத்தில் சந்தேகப்படும்படியான நபர்களின் செல்போன் உரையாடல்கள் குறித்த தரவுகள் தேவைப்படுகின்றன. குஜராத்தில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்தில் இருந்து ஒலி நாடாக்கள் தொடர்பான ஆய்வு முடிவுகள் வர வேண்டியுள்ளன. அவை கிடைக்கப்பெற்றதும் வழக்கு அடுத்தக்கட்டத்திற்கு நகரும்" எனத் தெரிவித்துள்ளனர்.

இதைக் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். 2017-ம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள முரளிதரன், இந்த வழக்கை விசாரிக்கும் 9 வது நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+