பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக சிவில் வார்.. 3,00,000 பேர் போராட்டம்.. பிரான்சில் மஞ்சள் புரட்சி!
பிரான்சில் நடக்கும் மக்கள் புரட்சி அந்த நாட்டிற்குள் உள்நாட்டு போரை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரான்ஸ்: பிரான்சில் நடக்கும் மக்கள் புரட்சி அந்த நாட்டிற்குள் உள்நாட்டு போரை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரான்சில் மக்கள் கடந்த ஒரு மாதமாக போராடி வருகிறார்கள். பெரும்பாலும் இளைஞர்களும், சமூக செயற்பாட்டளர்களும் சேர்ந்து இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரூன் தலைமையிலான அரசு உடனே கவிழ வேண்டும், மேக்ரூனை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

ஒரே காரணம்
இந்த போராட்டத்திற்கு ஒரே காரணம்தான். பெட்ரோல், டீசல் விலை உயர்வு மட்டும்தான். அங்கு இந்திய ரூபாய் மதிப்பில் பிரான்சில் பெட்ரோல் விலை 140 ரூபாய் வரை விற்கிறது. டீசல் 120 ரூபாய் வரை விற்கிறது. இதில் போன வாரம் தான் 20 சதவிகிதம் விலை ஏற்றப்பட்டது. இதன் காரணமாகத்தான் மக்கள் இந்த போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.

எப்போது தொடங்கியது
கடந்த நவம்பர் 14ம் தேதி இந்த போராட்டம் சிறிய பேரணியாக தொடங்கியது. ஆனால் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றதும் பெரிதானது. தற்போது பேஸ்புக், வாட்ஸ் ஆப் மூலம் பெரிய போராட்டமாக மாறியுள்ளது. தினமும் போராட்டம் நடக்கும் பாரிஸின் ஆர் டி டிரோம்ப் அருகே இருக்கும் கட்டிடம் நோக்கி மக்கள் குவிந்து வருகிறார்கள்.

உக்கிரம் அடைந்துள்ளது
கடந்த சனிக்கிழமை இந்த போராட்டம் உக்கிரம் அடைந்தது. போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியதால் பெரிய கலவரம் உருவானது. சனிக்கிழமை தொடங்கிய கலவரம் இப்போது வரை நடந்து வருகிறது. இதுவரை 247 கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டு இருக்கிறது.

எத்தனை பேர்
இந்த போராட்டத்தில் 3 லட்சம் பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். 600 பேர் காயம் அடைந்துள்ளனர். போலீஸ் பயன்படுத்தும் 13 துப்பாக்கிகள் காணாமல் போய் இருக்கிறது. 3 பேர் பலியாகி உள்ளனர். 250 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 456 கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தீ வைக்கப்பட்டு இருக்கிறது.

மஞ்சள் புரட்சி
இதை அந்நாட்டு மக்கள் மஞ்சள் ஆடை புரட்சி என்கிறார்கள். அதாவது நெடுஞ்சாலையில் மஞ்சள் ஆடை அணிந்து செல்லும்படி ஒரு காலத்தில் அந்நாட்டு அரசு ஆணையிட்டு இருந்தது. அதையும் எதிர்க்கும் வகையில் இந்த சட்டை அணிந்து போராடுவதாக கூறுகிறார்கள்.

சிவில் வார் நடக்கிறது
இதை அம்மக்கள் அமைதி போராட்டம் என்றாலும் பெரிய போருக்கான ஒத்திகை போலத்தான் நடந்து வருகிறது. இது உள்நாட்டு போரை கொண்டு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. ஏற்கனவே கிளர்ச்சி படைகள் அங்கே பெரிய பலம் பெற்று போராட்டம் செய்வதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications