இரண்டு உலக போர்கள்.. கொரோனா பாதிப்பு.. அனைத்தையும் கடந்து 117ஆவது பிறந்தநாள் கொண்டாடிய கன்னியாஸ்திரி
பாரிஸ்: கொரோனாவில் இருந்து குணமடைந்த ஐரோப்பாவின் மிகவும் வயதான நபரான பிரெஞ்சு கன்னியாஸ்திரி ஒருவர், தனது 117ஆவது பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாடியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் கன்னியாஸ்திரி ஆண்ட்ரே. 1904ஆம் ஆண்டு பிறந்த இவர் தான், தற்போது ஐரோப்பியாவிலேயே மிகவும் வயதான நபர் ஆவார். உலகை உலுக்கிய இரண்டு உலகப் போர்களையும் இவர் தனது வாழ்நாளில் பார்த்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்தப் பகுதியில் வசிக்கும் 81 நபர்களுடன் இவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு ஒரு மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின் அவர் பூரண குணமடைந்தார்.
இது குறித்து அவர் கன்னியாஸ்திரி ஆண்ட்ரே கூறுகையில், "எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். ஆனால் எனக்கு எதுவும் பெரிய மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. உடல் மட்டும் சற்று பலவீனமாக இருந்தது" என்று தெரிவித்தார்.
தனது வாழ்நாளில் இரண்டு உலகப் போர்களைக் கண்ட கன்னியாஸ்திரி ஆண்ட்ரே. இன்று தனது 117ஆவது பிறந்த நாளை சிறிய கேக் வெட்டி கொண்டாடினர். தற்போது அவர் வீல்சேரிலேயே உள்ளதாகவும் இருப்பினும், அவரது நம்பிக்கை துளியும் குறையவில்லை என்றும் காப்பகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆண்ட்ரே தனது 26 வயதில் கத்தோலிக்க கிறிஸ்துவராக மாறினார். அதன் பின்னர் அவர் தனது 47ஆவது வயதில் கன்னியாஸ்திரினார். அப்போது முதல் கிருத்துவ மத பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார். உலகில் தற்போது வாழும் இரண்டாவது மிகவும் வயதான நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications