நீங்களே உட்கார்ந்து பேசுங்க.. காஷ்மீர் விஷயத்தில் 3வது நாட்டை தலையிட விடாதீங்க.. பிரான்ஸ் அதிபர்
Recommended Video
பாரிஸ்: இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் காஷ்மீர் விவகாரத்தை பேசி தீர்க்க வேண்டும் என்றும் இந்த விஷயத்தில் எந்த மூன்றாவது நாட்டின் தலையீடோ அல்லது தூண்டுதலோ இருக்கக்கூடாது என்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் 5 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் நேற்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பாரிஸ் விமான நிலையத்தில் பிரான்ஸ் அரசு சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது அத்துடன் இந்திய வம்சாவளியினர் , இந்திய தேசிய கொடிகளை ஏந்தி வரவேற்றனர். பின்னர் பாரிஸில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சான்ட்லி என்ற இடத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அரண்மனைக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவரை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உற்சாகமாக வரவேற்றார்.
அங்கு இருவரும் இந்தியா பிரான்ஸ இடையிலான உறவுகள் குறித்து 90 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் இருநாடுகளுக்கும் இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பின்னர் பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இம்மானுவேல், "ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த முடிவு குறித்து பிரதமர் மோடி என்னிடம் விளக்கினார். இது அவர்களின் இறையாண்மைக்கு உள்பட்ட விஷயம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க வேண்டும். காஷ்மீர் விஷயத்தில் எந்த ஒரு மூன்றாவது நாட்டின் தலையீடோ, அல்லது தூண்டுதலோ இருக்கவே கூடாது. நான் சில நாள்களுக்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேச உள்ளேன் இப்போது இருதரப்பு (இந்தியா- பாகிஸ்தான்) பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்துவேன்" என்றார்.
முன்னதாக காஷ்மீர் விஷயத்தில் சமரசம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து இருந்த நிலையில் பிரான்ஸ்அதிபர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மூன்றாம் நாடு தலையீடு இருக்கவேகூடாது என தெரிவித்துள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications