Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெலிகிராம் சிஇஓ-க்கு 20 ஆண்டு சிறை? பாவெல் துரோவ் கைதுக்கு உண்மையில் என்ன காரணம்! பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

பாரீஸ்: டெலிகிராம் செயலியின் சிஇஓ 39 வயதான பாவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அவர் எதற்காகக் கைது செய்யப்பட்டார்.. அவருக்கு எத்தனை ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்துக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகில் இப்போதும் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலி என்றால் அது வாட்ஸ்அப் தான்.. அதேநேரம் வாட்ஸ்அப் செயலியில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.

france telegram

எனவே, மற்றொரு தரப்பினர் டெலிகிராம் செயலியைத் தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். டெலிகிராம் செயலியின் பயன்பாடு இப்போது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

கைது: இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் டெலிகிராம் செயலியின் சிஇஓ 39 வயதான பாவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அவர் எதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

எதற்காக கைது: டெலிகிராம் செயலியின் மூலம் நடக்கும் குற்றச் செயல்களைத் தடுக்க தவறியதாக ரஷ்ய நாட்டை சேர்ந்த பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளார். டெலிகிராம் செயலியில் நடக்கும் குற்றச் செயல்களைத் தடுக்க இவர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே இவரது கைதுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த கைது குறித்து விரைவில் டெலிகிராம் செயலி விளக்கம் ஒன்றை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெலிகிராம் செயலியில் மாடரேட்டர் எனப்படும் கண்காணிக்கும் நபர்கள் இல்லாத இல்லை. டெலிகிராம் செயலியில் குற்றச் செயல்கள் தடையின்றி நடக்க இதுவே காரணம் என்று பிரான்ஸ் போலீசார் கருதுகின்றனர். பாவெல் துரோவ் அஜர்பைஜானில் இருந்து தனது பிரைவேட் ஜெட் விமானத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு வந்த போது இந்த கைது நடந்துள்ளது.

இணையதளங்களில் சிறார்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசு ஆஃப்மின் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த ஆஃப்மின் அமைப்பு ஏற்கனவே பாவெல் துரோவ்வுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து இருந்த நிலையில், இந்த கைது நடந்துள்ளது. மோசடி, போதைப்பொருள் கடத்தல், சைபர் குற்றம், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது உள்ளிட்ட குற்றங்கள் குறித்து இந்த ஆஃப்மின் அமைப்பு விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா விமர்சனம்: டெலிகிராம் சிஇஓ பாவெல் துரோவ் ரஷ்யாவைச் சேர்ந்தவர். அவரை பிரான்ஸ் கைது செய்துள்ள நிலையில், ரஷ்யா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாவெல் துரோவ் கைது குறித்துத் தெளிவான தகவல்கள் தங்களிடம் இல்லை என்றும் இது குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள பிரான்ஸ் நாட்டில் உள்ள ரஷ்யத் தூதரகம் முயன்று வருவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பிரான்ஸ் சர்வாதிகார போக்கில் நடந்து கொள்வதாகவும் ரஷ்யா சாடியுள்ளது.

20 ஆண்டு சிறை: தீவிரவாதத்தை ஊக்குவிப்பது, போதை மருந்து கடத்தல், பண மோசடி உள்ளிட்ட குற்றச்செயல்களை டெலிகார்ம தளம் மூலம் தடையின்றி அனுமதிக்காதது, பிரான்ஸ் நடத்திற்கு ஒத்துழைக்க மறுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பாவெல் துரோவ் மீது முன்வைக்கப்படுகிறது. இதில் அவருக்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+