யாருப்பா அந்த காண்ட்ராக்டர்.. பீகாரில் சீட்டுக்கட்டுக்களை போல சரியும் பாலம்! இன்னைக்கு 15வது
பாட்னா: பீகாரில் ஆற்றுப் பாலங்கள் சீட்டுக்கட்டுகளை போல தொடர்ந்து சரிந்து வருகின்றன. இது குறித்து விவாதங்கள் மேலெழுந்துள்ள நிலையில், இன்று 15வது பாலம் சரிந்துள்ளது. இதனையடுத்து யாருப்பா அந்த காண்ட்ராக்டர் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. ஓரிரு நாட்களுக்கு முன்னர் பெய்த கனமழையால் டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதேபோல குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலும் கனமழை காரணமாக விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்திருந்தது. இந்நிலையில் பீகாரில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்று பாலங்கள் தொடர்ச்சியாக இடிந்து விழுந்துள்ளன.

கடந்த 4ம் தேதி பீகாரின் சிவான் மாவட்டம் கந்தகி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தியோரியா தொகுதியில் அமைந்துள்ள இந்த சிறிய பாலம், பல கிராமங்களை மஹ்ராஜ்கஞ்ச் பகுதியுடன் இணைத்திருந்தது. இது பீகாரில் கடந்த 15 நாள்களில் நிகழ்ந்த 7வது சம்பவமாகும். இதனை தொடர்ந்து 8வது சம்பவமாக அதே நாளில் சாப்ர மாவட்டத்தில் உள்ள மற்றொரு சிறு பாலம் இடிந்து விழுந்திருந்தது.
பாபா தோத்நாத் கோயில் அருகே உள்ள ஆற்றின் மேல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பாலம் கட்டப்பட்டிருக்கிறது. இது ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஜூலை 3ம் தேதி இடிந்து விழுந்தது. மொத்தமாக கடந்த 15 நாட்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்திருந்தன. இதனால் நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. பாலங்கள் இடிந்து விழுந்த இடங்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.
இப்டியாக சலசலப்புகள் எழுந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் பாலங்கள் சரிந்து விழ தொடங்கியுள்ளன. அராரியா மாவட்டத்தின் ஃபோர்பேஸ்கஞ்ச் தொகுதியில் உள்ள அம்ஹாரா கிராமத்தில் பர்மன் ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலம் கடந்த 16ம் தேதி இடிந்து விழுந்திருக்கிறது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,
"16ம் தேதி இடிந்து விழுந்த பாலம் கடந்த 2008-2009 காலத்தில் கட்டப்பட்டது. ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு பிறகு அதாவது 2017ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த பாலம் சேதமடைந்தது. எனவே நாங்கள் பாலத்தை மூடினோம். பாலத்தின் வழியாக இருந்த போக்குவரத்து தடை செய்யப்பட்டது. 2021-2022ல் பாலத்தில் பாழுதுபார்ப்பு பணிகள் முடிவடைந்து மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால், தற்போது இடிந்து விழுந்துவிட்டது" என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே பாலம் சரிந்த விவகாரத்தில் 15 பொறியாளர்களை பீகார் அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், அடுத்தடுத்து பாலங்கள் சரிந்த விழுந்திருப்பது பெரும் விவாதமாக வெடித்திருக்கிறது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications