34 எலும்புக்கூடுகள்.. 16 மண்டை ஓடுகள்.. ரயிலில் கடத்த முயன்ற மர்ம நபர்.. பகீர் காரணம்!
பீகாரில் எலும்புக்கூடுகளை கடத்த முயன்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
Recommended Video

பாட்னா: பீகாரில் எலும்புக்கூடுகளை ரயிலில் கடத்த முயன்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
பொதுவாக தற்போது ரயில் மூலமாக நடக்கும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துவிட்டது. முக்கியமாக வடஇந்தியாவில் ரயிலை பயன்படுத்தி அதிக அளவில் போதை பொருள் கடத்தப்படுகிறது.
ஆனால் ரயிலில் எலும்புக்கூடுகளை கடத்திய சம்பவம் இப்போதுதான் முதல்முறை அரங்கேறி உள்ளது. எலும்புகூடுகளை எடுத்து சென்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எலும்புகளை எடுத்து வந்தார்
பீகாரின் சப்பாரா ரயில்வே ஜங்சனில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. சஞ்சய் பிரசாத் என்ற நபர், அந்த ரயில் நிலையத்திற்கு பெரிய பெரிய மூட்டைகளுடன் வந்துள்ளார். இந்த மூட்டைகள் முழுக்க எலும்புக்கூடுகள் இருந்துள்ளது. இதை வெளியே தெரியாதது போல் கட்டி எடுத்து வந்துள்ளார்.

என்ன இருந்தது
அந்த மூட்டைகளில் மொத்தம் 34 எலும்புக்கூடுகள், 16 மண்டை ஓடுகள் இருந்துள்ளது. அதேபோல் பூட்டானில் பயன்படுத்தும் பூட்டான் ரூபாயும் இருந்துள்ளது. சில வெளிநாட்டு ஏடிஎம் அட்டைகள், மற்றும் ஒரு வெளிநாட்டு சிம் கார்ட் இருந்துள்ளது. சந்தேகத்தின் பெயரில் அவரை சோதனை செய்த போலீசார் உடனே அவரை கைது செய்தனர்.

விளக்கம் அளித்தார்
இந்த மூட்டையை அவர் உத்தர பிரதேசத்தின் பாலியா என்ற பகுதியில் இருந்து எடுத்து வந்துள்ளார். பூட்டான் சென்றுவிட்டு, பின் அங்கிருந்து மீண்டும் மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பாய்குரியில் இதை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அங்கிருக்கும் சில சாமியார்களிடம் இதை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கடும் விசாரணை
ஒரு ரகசிய பூஜைக்காக இதை கொடுக்க அவர் எடுத்து சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் பூஜை விவரங்கள் வெளியே தெரிவிக்கப்படவில்லை. போலீசார் அவரை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக இன்னும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications