Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சமச்சீர் வளர்ச்சியில் அசத்தும் ஒடிசா.. முதல்வர் நவீன் பட்நாயக் திட்டத்துக்கு வலுசேர்க்கும் அதிகாரி

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர் : ஒடிசாவில் அனைத்து மாவட்டங்களில் சமச்சீரான வளர்ச்சியை முதல்வர் நவீன் பட்நாயக் மேற்கொண்டு வரும் நிலையில் அதற்கு ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் வலு சேர்த்து வருகிறார்.

ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக நவீன் பட்நாயக் உள்ளார். அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை மேற்கொள்ள சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

A man who is Steering Transformation of Odisha under CM Naveen Patnaik

இங்கு 5T என்ற முறையில் Team work-குழுவாக பணி செய்தல்), technology-தொழில்நுட்பம் பயன்படுத்துதல், transparency-வெளிப்படைத்தன்மை), transformation-மாற்றத்தை ஏற்படுத்துதல் மற்றும் time limit- நேரவரம்புடன் பணி செய்தல் உள்ளிட்டவை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தொலைநோக்குப் பார்வையுடனும், அரசு கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ந்து வருகிறது. முதல்வர் நவீன் பட்நாயக்கின் அறிவுரைப்படி அவரது தனிச் செயலரும், 5T செயலாளருமான விகே பாண்டியன் தலைமையில் தொடர்ந்து அரசு மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் சமச்சீரான வளர்ச்சி பெறும் வகையில் திட்டங்களை விகே பாண்டியன் நிறைவேற்றி வருகிறார்.

அதிகாலையில் உள்கட்டமைப்பு திட்டங்களை ஆராய்தல் குறித்த நேரத்தில் திட்டங்களை முடிப்பதே முதன்மையாக கொண்டு செயல்பட்டு வருகிறார். அரசு மீதோ, தன்மீதோ என்ற விமர்சனங்களும் எழாமல் மாநில மக்களின் நலன் கருதி செயல்பட்டு வருகிறார். அவரது அர்ப்பணிப்புடன், கடமையாற்றி வருவதால் ஒடிசா மக்களின் மனதில் அவர் இடம்பிடித்துள்ளார். இதற்கு அவர் கிராமங்கள் தோறும் சென்று வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்து மக்களோடு மக்களாக உரையாடுவது தான் முக்கிய காரணமாகும்.

இந்த வேளையில் அரசின் திட்டங்கள் பற்றிய விஷயங்களை அறிந்து கொள்கிறார். மேலும் மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் சிகிச்சை தரம் குறித்து கேட்பது, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுவது மற்றும் சேர்ந்து உணவு உண்பது உள்ளிட்டவற்றின் மூலம் மக்களின் மனநிலையை அறிந்து ஈகோ எதுவுமின்றி செயல்பட்டு வருகிறார்.

மேலும் தனது சக அதிகாரிகளுடன் நட்பாகவும், அதேவேளையில் மக்கள் சேவையை அதிகாரிகள் செய்ய ஊக்குவிக்கும் வகையிலும் கலந்துரையாடும் குணம் கொண்டுள்ளார். இதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில், பாண்டியன் ‛‛இந்தியாவை போன்ற ஆட்சிப்பணி நிர்வாகம் உலகில் மிகக் குறைவு. ஏழைகளுக்கு உதவுவதற்கு இப்போது இருப்பதை விட நல்ல நேரம் இல்லை. அனைவரும் திறமையை பயன்படுத்தி ஏழைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கு உதவ வேண்டும்'' என கூறியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+