சமச்சீர் வளர்ச்சியில் அசத்தும் ஒடிசா.. முதல்வர் நவீன் பட்நாயக் திட்டத்துக்கு வலுசேர்க்கும் அதிகாரி
புவனேஸ்வர் : ஒடிசாவில் அனைத்து மாவட்டங்களில் சமச்சீரான வளர்ச்சியை முதல்வர் நவீன் பட்நாயக் மேற்கொண்டு வரும் நிலையில் அதற்கு ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் வலு சேர்த்து வருகிறார்.
ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக நவீன் பட்நாயக் உள்ளார். அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை மேற்கொள்ள சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

இங்கு 5T என்ற முறையில் Team work-குழுவாக பணி செய்தல்), technology-தொழில்நுட்பம் பயன்படுத்துதல், transparency-வெளிப்படைத்தன்மை), transformation-மாற்றத்தை ஏற்படுத்துதல் மற்றும் time limit- நேரவரம்புடன் பணி செய்தல் உள்ளிட்டவை பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தொலைநோக்குப் பார்வையுடனும், அரசு கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ந்து வருகிறது. முதல்வர் நவீன் பட்நாயக்கின் அறிவுரைப்படி அவரது தனிச் செயலரும், 5T செயலாளருமான விகே பாண்டியன் தலைமையில் தொடர்ந்து அரசு மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் சமச்சீரான வளர்ச்சி பெறும் வகையில் திட்டங்களை விகே பாண்டியன் நிறைவேற்றி வருகிறார்.
அதிகாலையில் உள்கட்டமைப்பு திட்டங்களை ஆராய்தல் குறித்த நேரத்தில் திட்டங்களை முடிப்பதே முதன்மையாக கொண்டு செயல்பட்டு வருகிறார். அரசு மீதோ, தன்மீதோ என்ற விமர்சனங்களும் எழாமல் மாநில மக்களின் நலன் கருதி செயல்பட்டு வருகிறார். அவரது அர்ப்பணிப்புடன், கடமையாற்றி வருவதால் ஒடிசா மக்களின் மனதில் அவர் இடம்பிடித்துள்ளார். இதற்கு அவர் கிராமங்கள் தோறும் சென்று வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்து மக்களோடு மக்களாக உரையாடுவது தான் முக்கிய காரணமாகும்.
இந்த வேளையில் அரசின் திட்டங்கள் பற்றிய விஷயங்களை அறிந்து கொள்கிறார். மேலும் மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் சிகிச்சை தரம் குறித்து கேட்பது, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுவது மற்றும் சேர்ந்து உணவு உண்பது உள்ளிட்டவற்றின் மூலம் மக்களின் மனநிலையை அறிந்து ஈகோ எதுவுமின்றி செயல்பட்டு வருகிறார்.
மேலும் தனது சக அதிகாரிகளுடன் நட்பாகவும், அதேவேளையில் மக்கள் சேவையை அதிகாரிகள் செய்ய ஊக்குவிக்கும் வகையிலும் கலந்துரையாடும் குணம் கொண்டுள்ளார். இதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில், பாண்டியன் ‛‛இந்தியாவை போன்ற ஆட்சிப்பணி நிர்வாகம் உலகில் மிகக் குறைவு. ஏழைகளுக்கு உதவுவதற்கு இப்போது இருப்பதை விட நல்ல நேரம் இல்லை. அனைவரும் திறமையை பயன்படுத்தி ஏழைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கு உதவ வேண்டும்'' என கூறியது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications