இடஒதுக்கீட்டுக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு- பீம் ஆர்மியின் பாரத் பந்த்- அரசியல் கட்சிகள் ஆதரவு

Subscribe to Oneindia Tamil

பாட்னா: இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பீம் ஆர்மியின் சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இத்தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

Bhim Army’s Bharat Bandh against SC order against Reservation

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் எதிரொலித்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பீம் ஆர்மி இன்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

பீகாரில் பீம் ஆர்மியின் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துள்ளது. அதேபோல் உபேந்திர குஷாவாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி, ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, பப்பு யாதவின் ஜன் ஆதிகார் கட்சி ஆகியவையும் இம்முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

சத்ரா யுவ சங்கர்ஷ் சமிதி உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகளும் இம்முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றன. பீகார் மட்டுமல்லாது உத்தரப்பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+