பீகார் வாக்காளர் பட்டியலில் 3 லட்சம் இடம்பெயர் தொழிலாளர்கள் வாக்காளர்களாக சேர்ப்பு
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெயர் தொழிலாளர்கள் 3 லட்சம் பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
பீகார் சட்டசபைக்கான தேர்தல் எந்த நிமிடத்திலும் அறிவிக்கப்படலாம். பீகாரில் ஆளும் ஜேடியூ-பாஜக மற்றும் ஆர்ஜேடி-காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

3 லட்சம் பேர் வாக்காளர்கள்
ஆர்ஜேடி-காங்கிரஸ் அணியில் இடதுசாரிகளும் இணைந்துள்ளன. பீகார் தேர்தலை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி அடுத்தடுத்து தொடங்கி வைத்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காலத்தில் பிற மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் முக்கிய சக்திகளாக தேர்தல் களத்தில் உருவெடுத்துள்ளனர். பீகாரில் இடம்பெயர் தொழிலாளர்கள் இதுவரை 3 லட்சம் பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

திரும்பிய 30 லட்சம் பேர்
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பீகார் அதிகாரிகள், 30 லட்சம் இடம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்பி உள்ளனர். இவர்களில் 10% முதல் 12% பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை இல்லை. இப்போது இவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 3 லட்சம் பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்றனர்.

முதல் முறையாக வாக்களிப்பு
அதேநேரத்தில் 87% இடம்பெயர் தொழிலாளர்களிடம் வாக்காளர் அடையாள அட்டைகள் இருக்கின்றன. ஆனால் இதுவரை எந்த ஒரு தேர்தலிலும் வந்து அவர்கள் வாக்களித்ததும் இல்லை. இம்முறைதான் முதல் முறையாக சொந்த மாநிலத்தில் இவர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர் அதிகாரிகள்.

பீகார் வாக்காளர்கள்
கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி வெளியிடப்பட்ட உத்தேச வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 7,18,22,450 பேர் வாக்காளர்கள். இவர்களில் 3,79,12,127 பேர் ஆண்கள்; 3,39,07,979 பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் 2,344 பேர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications