Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மக்கள் தொகையை கட்டுப்படுத்த.. பெண்கள் குறித்து நிதிஷ் கூறிய கருத்தால் வெடித்த சர்ச்சை.. விடாத பாஜக

Subscribe to Oneindia Tamil

பாட்னா: மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் பெண்கள் கல்வி கற்பதன் முக்கியத்துவம் குறித்து பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், அது குறித்து பேசிய சில வார்த்தைகள் பீகார் சட்டமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. நிதிஷ்குமாரின் கருத்து கீழ்த்தரமானது என பாஜக சாடியுள்ளது.

பீகாரில் அண்மையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் விவரங்களை அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் நிதிஷ்குமார் வெளியிட்டார். சாதிவாரியாக மக்களின் பொருளாதார நிலைமை குறித்தும் இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய நிதிஷ் குமார் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது குறித்தும் பேசினார். அப்போது பெண்கள் குறித்து நிதிஷ் குமார் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

bihar-cm-nitish-bizarre-remarks-on-womens-education-to-control-population-triggershuge-controversy

நிதிஷ் குமார் கூறுகையில், மக்கள் தொகையை கட்டுப்படுத்த பெண்களுக்கு கல்வி அறிவு பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்று பேசினர். இதன் தொடர்ச்சியாக நிதிஷ் குமார் முன்வைத்த சில கருத்துக்கள்தான் அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. நிதிஷ்குமார் கூறுகையில், கணவரின் செயல்பாடுகள் தான் அதிக குழந்தை பிறப்புக்கு காரணமாகிறது. எனினும், கல்வி அறிவின் மூலம் கணவரை கட்டுப்படுத்துவது எப்படி என்பது பெண்களுக்கு தெரியும்.

தற்போது பிறப்பு விகிதம் சரிந்து வருவதற்கு இதுவே காரணம் ஆகும் என நகைச்சுவை பாணியில் பேசினார். மேலும், கருவுறுதல் விகிதம் இதற்கு முன்பு 4.3 சதவிகித ம் இருந்தது ஆனால் தற்போது 2.9 ஆக குறைந்துள்ளது. விரைவில் 2 ஆக குறையும்" என்றார். நிதிஷ்குமார் இவ்வாறு குறிப்பிட்டதும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சிரித்தனர். ஆனால், அவையில் இருந்த சில பெண் எம்.எல்.ஏக்கள் நிதிஷ்குமாரின் கருத்தால் கொஞ்சம் அசவுகரியாக உணர்ந்தையும் பார்க்க முடிந்தது.

நிதிஷ்குமாரின் இந்த பேச்சை பிடித்துக் கொண்ட பாஜக, முதல்வரின் பேச்சு மிகவும் கீழ்த்தரமானது என்று சாடியுள்ளது. இது தொடர்பாக பீகார் மாநில பாஜகவின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்தியா அரசியலில் நிதிஷ்குமாரை விட இழிவான அரசியல்வாதி யாரும் இருக்க மாட்டார்கள்" என மிகக்கடுமையாக விமர்சித்துள்ளது. பாஜக எம்.எல்.ஏ காயத்ரி தேவி கூறுகையில், நிதிஷ்குமாருக்கு 70-வயது ஆகிறது. அவர் முட்டாள்தனமான கருத்துகளை கூறி வருகிறார். பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு வார்த்தைகளை நிதிஷ்குமார் பயன்படுத்தியிருக்கிறார். அவரின் கருத்துக்கு எதிராக நாங்கள் போராடுவோம்" என்றார்.

இதனிடையே, நிதிஷ்குமாருக்கு ஆதரவாக பேசியுள்ள துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமார் பாலியல் கல்வி குறித்து பேசினார். இந்த டாபிக் குறித்து பேசவே மக்கள் தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால் பள்ளிகளில் இது குறித்து கற்பிக்கப்படுகிறது. உயிரியல் மற்றும் அறிவியல் பாடங்களில் குழந்தைகள் இது பற்றி கற்றுக்கொள்கிறார்கள். எனவே இதை தவறான விதத்தில் எடுத்து செல்லக் கூடாது. நிதிஷ்குமாரின் கருத்தை திரிக்கக் கூடாது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+