பீகார்: அமைச்சர் பதவிக்காக முட்டி மோதும் காங். எம்.எல்.ஏக்கள்.. டெல்லிக்கும் கோஷ்டிகளாக படையெடுப்பு
பாட்னா/டெல்லி: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் எப்படியாவது இடம் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முட்டி மோதுகின்றனர். அமைச்சர் பதவியை பெறுவதற்காக டெல்லிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் படையெடுத்து உள்ளனராம்.
பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஜேடியூ, ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்துள்ளது. முதல்வராக நிதிஷ்குமாரும் துணை முதல்வராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில் புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது. பீகார் சட்டசபையில் வரும் 24-ந் தேதி நிதிஷ்குமார் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. அதற்கு முன்னதாக அமைச்சர் பதவிகள் ஒதுக்கீட்டை அதிருப்தி இல்லாமல் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆர்ஜேடி, ஜேடியூ இரு கட்சிகளும் தலா 14 அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளன. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 4 அமைச்சர் பதவி வழங்கவும் முடிவு செய்துள்ளன.
பீகார் சட்டசபையில் காங்கிரஸுக்கு 19 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த 19 எம்.எல்.ஏக்களில் பலரும் எப்படியாவது அமைச்சராகிவிட வேண்டும் என்பதற்காக முட்டி மோதுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் சத்ரபதி யாதவ் என்ற எம்.எல்.ஏ, சோனியா காந்திக்கு அமைச்சர் பதவி கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், நான் யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவன்; ஆகையால் என்னை கட்டாயம் அமைச்சராக்கித்தான் தீர வேண்டும் என அடம் பிடித்திருக்கிறார்.
பீகார் மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் பக்தசரண் தாஸ், டெல்லியில் ஆலோசனை நடத்துவதற்காக சென்றுள்ளார். அதேபோல் பல காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் கோஷ்டி கோஷ்டியாக டெல்லிக்கு படையெடுத்துள்ளனர். அடைந்தால் அமைச்சர் பதவிதான் என்ற சூளுரையோடு டெல்லிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் படையெடுத்திருக்கின்றனர்.
அதேநேரத்தில் பீகாரில் புதிய ஆட்சி அமைய காரணமே சோனியா காந்திதான். ஆகையால் காங்கிரஸுக்கு கணிசமான எண்ணிக்கையில் அமைச்சர் பதவிகளை கொடுத்துதான் ஆக வேண்டும் என்ற குரலையும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
Recommended Video
பீகாரில் ஆட்சி அமையும் போதே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இப்படி கோதாவில் குதித்திருப்பதை பாஜக மவுனமாக ரசித்து வருகிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications