பாட்னா: பீகாரில் 2ஆம் கட்டமாக 122 தொகுதிகளில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லியில் நேற்று நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று வாக்குப் பதிவு நடைபெறும், 122 தொகுதிகளில் 3 கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர்.
பீகாரில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில், 2 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி கடந்த 6ஆம் தேதி 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், இன்று மீதமுள்ள 122 தொகுதிகளில் சட்டசபைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கி உள்ளது. இன்றைய தேர்தலில் 136 பெண்கள் உட்பட மொத்தம் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதிகளில் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 கோடியே 95 லட்சம் ஆண், 1 கோடியே 74 லட்சம் பேர் பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 943 பேரும் வாக்களிக்க உள்ளனர்.
இந்த தேர்தலுக்காக 45,399 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடைபெறும். பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளவற்றில் மட்டும் மாலை 4 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவடைகிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் 6 மணிக்குப் பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாக உள்ளன.
Nov 11, 2025, 6:17 pm IST
பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது
Nov 11, 2025, 6:17 pm IST
2ஆம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது வரை 67.14 வாக்குகள் பதிவாகியுள்ளது
Nov 11, 2025, 4:39 pm IST
பீகார் சட்டமன்றத் தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 60.40% வாக்குகள் பதிவாகியுள்ளன.
Nov 11, 2025, 4:11 pm IST
பீகாரில் சத்தபூர் சட்டமன்றத் தொகுதியில் 111 வயது மூதாட்டி நசிமா கதுன் தனது வாக்கைப் பதிவு செய்தார். வாக்குச்சாவடிக்கு வீல் சேரில் வந்து அவர் ஜனநாயக கடமையாற்றினார்.
#WATCH | Supaul, Bihar: A 111-year-old woman, Nasima Khatun, casts her vote at Chhatapur Assembly Constituency during Phase 2 of Bihar Legislative Assembly Elections. She says, "I have cast my vote and fulfilled my duty..." pic.twitter.com/PyWKBh92tl
பீகார் 2ம் கட்ட தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 47.62 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கிசான்கஞ்ச் மாவட்டத்தில் 51.86 சதவீத ஓட்டுகளும், கயா மாவட்டத்தில் 50.95 சதவீத ஓட்டுகளும், ஜமுய் மாவட்டத்தில் 50.91 சதவீத ஓட்டும், பாங்கா மாவட்டத்தில் 50.07 சதவீத ஓட்டுகளும் பதிவாகி உள்ளது. மதுபானி மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 43.39 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
Nov 11, 2025, 2:13 pm IST
பீகாரில் மக்கள் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்து வருவதாகவே நான் நினைக்கிறேன்.. வளர்ந்த பீகாரை உருவாக்கவும், முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் பிரதமர் மோடி இரட்டை எஞ்சின் அரசுக்காகவும் பீகார் மக்கள் வாக்களிக்கிறார்கள். என்டிஏ கூட்டணி 180- 200 இடங்களில் வெல்லும்- பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் சௌபே
Nov 11, 2025, 2:03 pm IST
பீகாரில் மக்கள் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்து வருவதாகவே நான் நினைக்கிறேன்.. வளர்ந்த பீகாரை உருவாக்கவும், முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் பிரதமர் மோடி இரட்டை இஞ்சின் அரசுக்காகவும் பீகார் மக்கள் வாக்களிக்கிறார்கள். என்டிஏ கூட்டணி 180- 200 இடங்களில் வெல்லும்- பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் சௌபே
Nov 11, 2025, 1:52 pm IST
பீகாரில் உள்ள அராரியா வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டதால் பெரும் பரபரப்பு.
Nov 11, 2025, 1:22 pm IST
பீகார் மக்கள் மாற்றம் வேண்டும் என முடிவெடுத்துவிட்டனர்.. 20 ஆண்டுகளாக ஆட்சி செய்த அரசுக்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. பீகாரில் "இந்தியா" ஆட்சியை அமைப்பது உறுதி- பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ராம்
Nov 11, 2025, 12:05 pm IST
பீகார் 2ம் கட்ட சட்டசபை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 31.38 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. கிஷான்கஞ்ச் தொகுதியில் அதிகபட்சமாக
34.74 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
Nov 11, 2025, 10:20 am IST
Main HC காலை 9 மணி நிலவரப்படி 14.55 சதவீத ஓட்டு பதிவு
பீகாரில் 2ம் கட்ட சட்டசபை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 14.55 சதவீத ஓட்டு பதிவு
Nov 11, 2025, 9:35 am IST
அதிகமாக ஓட்டளியுங்கள் - மோடி
‛‛இன்று, பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். வாக்குப்பதிவு புதிய சாதனை படைக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவு.
Nov 11, 2025, 8:42 am IST
MHC மாற்றத்துக்காக ஓட்டளிக்க மக்களிடம் பிரசாந்த் கிஷோர்
* ‛‛பீகார் மக்கள் அதிகமாக வாக்களிக்க வேண்டும். மாற்றத்துக்கான வாக்காளிக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைகளின் கல்விக்காக வாக்களிக்க வேண்டும். முதல் கட்ட தேர்தலை விட இந்த தேர்தலில் அதிகமான வாக்குகள் பதிவாக அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். அப்போது தான் நவம்பர் 14ம் தேதி பீகாரில் மாற்றம் ஏற்படும்’’ - ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிசோர் பொதுமக்களுக்கு கோரிக்கை.
Nov 11, 2025, 7:49 am IST
பாஜக எம்பி சஞ்சய் ஜெய்ஸ்வால் வாக்கு செலுத்தினார்
பீகாரின் பெட்டியா வாக்குச்சாவடியில் பாஜக எம்பி சஞ்சய் ஜெய்ஸ்வால் தனது ஓட்டை பதிவு செய்தார். வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
பீகாரில் 2வது கட்ட சட்டசபை தேர்தலில் 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக ஓட்டுப்பதிவு. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக 7 சட்டசபை தொகுதிகளில் மட்டும் 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைய உள்ளது.
Nov 11, 2025, 6:50 am IST
பீகாரில் இன்னும் சற்று நேரத்தில் ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. ஓட்டுப்பதிவுக்கு முன்பாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாதிரி ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது.
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: பீகார் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும், நவம்பர் 11, 2025 அன்று மாலை 6 மணிக்கு பீகார் எக்ஸிட் போல் வெளியிடப்படும்
6:38 AM, 11 Nov
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: பீகார் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும், நவம்பர் 11, 2025 அன்று மாலை 6 மணிக்கு பீகார் எக்ஸிட் போல் வெளியிடப்படும்
6:50 AM, 11 Nov
பீகாரில் இன்னும் சற்று நேரத்தில் ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. ஓட்டுப்பதிவுக்கு முன்பாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாதிரி ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது.
பீகாரில் 2வது கட்ட சட்டசபை தேர்தலில் 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக ஓட்டுப்பதிவு. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக 7 சட்டசபை தொகுதிகளில் மட்டும் 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைய உள்ளது.
7:49 AM, 11 Nov
பாஜக எம்பி சஞ்சய் ஜெய்ஸ்வால் வாக்கு செலுத்தினார்
பீகாரின் பெட்டியா வாக்குச்சாவடியில் பாஜக எம்பி சஞ்சய் ஜெய்ஸ்வால் தனது ஓட்டை பதிவு செய்தார். வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
MHC மாற்றத்துக்காக ஓட்டளிக்க மக்களிடம் பிரசாந்த் கிஷோர்
* ‛‛பீகார் மக்கள் அதிகமாக வாக்களிக்க வேண்டும். மாற்றத்துக்கான வாக்காளிக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைகளின் கல்விக்காக வாக்களிக்க வேண்டும். முதல் கட்ட தேர்தலை விட இந்த தேர்தலில் அதிகமான வாக்குகள் பதிவாக அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். அப்போது தான் நவம்பர் 14ம் தேதி பீகாரில் மாற்றம் ஏற்படும்’’ - ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிசோர் பொதுமக்களுக்கு கோரிக்கை.
9:35 AM, 11 Nov
அதிகமாக ஓட்டளியுங்கள் - மோடி
‛‛இன்று, பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். வாக்குப்பதிவு புதிய சாதனை படைக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவு.
10:20 AM, 11 Nov
Main HC காலை 9 மணி நிலவரப்படி 14.55 சதவீத ஓட்டு பதிவு
பீகாரில் 2ம் கட்ட சட்டசபை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 14.55 சதவீத ஓட்டு பதிவு
12:05 PM, 11 Nov
பீகார் 2ம் கட்ட சட்டசபை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 31.38 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. கிஷான்கஞ்ச் தொகுதியில் அதிகபட்சமாக
34.74 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
1:22 PM, 11 Nov
பீகார் மக்கள் மாற்றம் வேண்டும் என முடிவெடுத்துவிட்டனர்.. 20 ஆண்டுகளாக ஆட்சி செய்த அரசுக்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. பீகாரில் "இந்தியா" ஆட்சியை அமைப்பது உறுதி- பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ராம்
1:52 PM, 11 Nov
பீகாரில் உள்ள அராரியா வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டதால் பெரும் பரபரப்பு.
2:03 PM, 11 Nov
பீகாரில் மக்கள் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்து வருவதாகவே நான் நினைக்கிறேன்.. வளர்ந்த பீகாரை உருவாக்கவும், முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் பிரதமர் மோடி இரட்டை இஞ்சின் அரசுக்காகவும் பீகார் மக்கள் வாக்களிக்கிறார்கள். என்டிஏ கூட்டணி 180- 200 இடங்களில் வெல்லும்- பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் சௌபே
2:13 PM, 11 Nov
பீகாரில் மக்கள் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்து வருவதாகவே நான் நினைக்கிறேன்.. வளர்ந்த பீகாரை உருவாக்கவும், முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் பிரதமர் மோடி இரட்டை எஞ்சின் அரசுக்காகவும் பீகார் மக்கள் வாக்களிக்கிறார்கள். என்டிஏ கூட்டணி 180- 200 இடங்களில் வெல்லும்- பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் சௌபே
3:45 PM, 11 Nov
பீகார் 2ம் கட்ட தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 47.62 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கிசான்கஞ்ச் மாவட்டத்தில் 51.86 சதவீத ஓட்டுகளும், கயா மாவட்டத்தில் 50.95 சதவீத ஓட்டுகளும், ஜமுய் மாவட்டத்தில் 50.91 சதவீத ஓட்டும், பாங்கா மாவட்டத்தில் 50.07 சதவீத ஓட்டுகளும் பதிவாகி உள்ளது. மதுபானி மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 43.39 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
4:11 PM, 11 Nov
பீகாரில் சத்தபூர் சட்டமன்றத் தொகுதியில் 111 வயது மூதாட்டி நசிமா கதுன் தனது வாக்கைப் பதிவு செய்தார். வாக்குச்சாவடிக்கு வீல் சேரில் வந்து அவர் ஜனநாயக கடமையாற்றினார்.
#WATCH | Supaul, Bihar: A 111-year-old woman, Nasima Khatun, casts her vote at Chhatapur Assembly Constituency during Phase 2 of Bihar Legislative Assembly Elections. She says, "I have cast my vote and fulfilled my duty..." pic.twitter.com/PyWKBh92tl
Stay Tuned for Bihar Election 2025 Phase 1 Voting LIVE News Updates in Tamil. Get the latest news, polling percentage, key constituency highlights, voter turnout reports, and on-ground updates from the Bihar Assembly Election 2025 Polls Phase 1.