பீகாரில் மீண்டும் நிதிஷ் – பாஜக ஆட்சி.. ஜஸ்ட் மிஸ் செய்யும் தேஜஸ்வி.. பீப்பிள்ஸ் பல்ஸ் கணிப்பு
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. நிதிஷ் பாஜக கூட்டணி, தேஜஸ்வி காங்கிரஸ் கூட்டணி களத்தில் சீறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடன் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் போட்டியாளராக தன்னுடைய முதல் தேர்தலை சந்திக்கவுள்ளார். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. பீப்பிள்ஸ் பல்ஸ் வெளியிட்டுள்ள கணிப்பில் பாஜக நிதிஷ் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகள் உள்ளன. அங்கு இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த நவம்பர் 6 ஆம் தேதி 121 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 64.66 சதவீதம் வாக்கு பதிவாகியிருந்தது. இன்று (நவம்பர் 11) 122 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 67.14 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

பீகார் தேர்தல் களம்
சுமார் 66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது தேசியளவில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து அங்கு மொத்தம் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேசிய தலைவர்கள் முதல் மாநில தலைவர்கள் வரை பீகாரில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆளும் ஜேடியூ, தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்கிறது.
பரபரக்கும் களம்
மறுபக்கம் ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிப்பதற்கு முயற்சி செய்கிறது. அதேபோல பிரபல தேர்தல் வகுப்பாளரும், ஜன்சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோரும் களத்தில் உள்ளார். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக இருக்கும் என்பதால் பீகார் தேர்தல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
வாக்கு எண்ணிக்கை
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பின் சில முடிவுகளில் நிதிஷ்குமாரின் ஜேடியூ, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமான முடிவுகள் வந்துள்ளன. வாக்கு சதவீத அடிப்படையில் பாஜக, அதற்கு அடுத்து ஆர்ஜேடி அதிக வாக்குகளை பெறும் என கூறப்பட்டது. முதல்வர் தேர்வில் தேஜஸ்வி யாதவுக்கு அதிகம் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. 122 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கும். வருகிற நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாய்ப்பு
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. பீப்பிள்ஸ் பல்ஸ் (Peoples Pulse) வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜக - ஜேடியூ தேசிய ஜனநாயக கூட்டணி 133-159 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி 75-101 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
வாக்கு சதவீதம்
பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் 0-5 தொகுதிகளிலும், மற்றவர்கள் 2-8 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. வாக்கு சதவீத அடிப்படையில் தேசிய ஜனநாயக கூட்டணி 46.2 சதவீதம், காங்கிரஸ் கூட்டணி 37.9 சதவீதம் வாக்கும், ஜன்சுராஜ் கட்சி 9.7 சதவீதம் வாக்கும் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கட்சி அடிப்படையில்
கட்சிகள் அடிப்படையில் பாஜக 21.4 சதவீதம், ஆர்ஜேடி 23.3 சதவீதம், ஜேடியூ 17.6 சதவீதம், காங்கிரஸ் 8.7 சதவீதம் வாக்குகள் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளர் தேர்வில் தேஜஸ்வி யாதவுக்கு 32 சதவீதம் பேரும். நிதீஷ்குமாருக்கு 30 சதவீதம் பேரும், பிரசாந்த் கிஷோர் மற்றும் சிராஜ் பஸ்வானுக்கு தலா 8 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications