பீகார் 2-ம் கட்ட தேர்தல்: 94 தொகுதிகளில் காலை 9 மணி வரை 8.05% வாக்கு பதிவு

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் 2-ம் கட்டமாக 94 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் காலை 9 மணிவரை மொத்தம் 8.05% வாக்குகள் பதிவாகி உள்ளன.

பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக அக்டோபர் 28-ல் 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து 94 தொகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

Bihar Election Second Phase: Voting begins at 7 am today across 94 Assembly seats

2-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 2.85 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 1,50,33,034 பேர் ஆண் வாக்காளர்கள்;1,35,16,271 பேர் பெண் வாக்காளர்கள்.

தேர்தல் களத்தில் 1463 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் 1316 பேர் ஆண்கள்; 146 பேர் பெண்கள். 2-ம் கட்ட வாக்குப் பதிவுக்காக 41,362 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

2-ம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக மகராஜ்கஞ்ச் தொகுதியில் 27 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். தாராலு தொகுதியில் 4 பேர் மட்டுமே வேட்பாளர்கள்.

2-ம் கட்ட தேர்தலில் பாஜக 46; ஜேடியூ 43 இடங்களில் போட்டியிடுகின்றன. ஆர்ஜேடி 56; காங்கிரஸ் 24 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. சிபிஎம்எல் 6, சிபிஎம், சிபிஐ தலா 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. எல்.ஜே.பி. மொத்தம் 52 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

ஆர்ஜேடி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் போட்டியிடும் ராகோபூர் தொகுதியிலும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேஜஸ்வியின் சகோதரர் தேஜ்பிரதாப் களம் காணும் ஹசன்பூர் தொகுதியிலும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

7 முறை வெற்றி பெற்ற பீகார் அமைச்சர் நந்த் கிஷோர் யாதவ், அமைச்சர்கள் ராம்சேவக் சிங், ராண ரந்தீர் சிங், ஆகியோரது தொகுதிகளிலும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+