பீகாரில் அதிக தொகுதிகளை வென்றாலும்.. வாக்கு சதவீதத்தில் பாஜக டாப் கிடையாது! இந்த இந்த கட்சிதான்
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி அதிக தொகுதிகளைில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இருப்பினும் வாக்கு சதவிகிதத்தில் பாஜகவோ, ஐக்கிய ஜனதா தளம் கட்சியோ முதலிடம் பிடிக்கவில்லை. எந்தெந்த கட்சிகள் எவ்வளவு வாக்குகளை பெற்றிருக்கிறது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
என்டிஏ கூட்டணி 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சியான மகாபந்தனத்திற்கு பெரும் தோல்வியைக் கொடுத்துள்ளது. இதில் பாரதிய ஜனதா கட்சி 89 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், அதிக வாக்குகள் பெற்ற கட்சிகளின் பட்டியலில் அதற்கு முதல் இடம் கிடைக்கவில்லை.

ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களுடன் பாஜகவுக்கு அடுத்தப்படியாக இருக்கிறது. எனினும், இந்த இரு கட்சிகளுமே வாக்கு சதவீதத்தில் முதல் இடத்தைப் பிடிக்கவில்லை.
இதற்கு அப்படியே நேரெதிராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் வெறும் 25 இடங்களை மட்டுமே பெற்றாலும், அனைத்து கட்சிகளை விடவும் அதிக வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி, 23 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி 20.8 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஐக்கிய ஜனதா தளம் 19.25 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. காங்கிரஸ் சுமார் 43 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. சதவிகிதமாக பார்த்தால் 8.71% ஆகும். சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 4.97 சதவீத வாக்குகளையும், சி.பி.ஐ. (எம்.எல்.)எல் கட்சி 2.84 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. மற்ற கட்சிகளை பொறுத்த அளவில்,
- அசாதுதின் ஓவைசியின் கட்சி - 1.85%
- பகுஜன் சமாஜ் கட்சி - 1.62%
- சிபிஐ - 0.74%
- சிபிஎம் - 0.60%
- ஆம் ஆத்மி 0.30%
வாக்குகளை பெற்றிருக்கின்றன. பீகார் தேர்தலில் காங்கிரஸ் கடும் தோல்வியடைந்திருக்கிறது. இந்நிலையில், இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, "ஆரம்பத்திலிருந்தே இந்த முடிவுகள் நியாயமற்றதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஜனநாயகத்தை பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்று கூறியிருக்கிறார். அதேபோல காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன் கார்கே, "இந்த தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை முழுமையாக ஆராய்வோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications