தேஜஸ்வி ஹெலிகாப்டரை முற்றுகையிட்ட கும்பல்.. பீதியில் ஆர்ஜேடி.. பாதுகாப்பு கேட்கிறது
தேஜஸ்வி ஹெலிகாப்டரை ஒரு கும்பல் முற்றுகையிடப்பட்டது
பாட்னா: ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்குமாறு அக்கட்சி தேர்தல் ஆணையத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில் ஒரு தேர்தல் பிரச்சாரத்தின்போது அவரது ஹெலிகாப்டரை சுற்றி பெரும் கூட்டம் கூடி விட்டதால் தேஜஸ்வி பாதுகாப்பு குறித்து அக்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர். அவருக்கு ஏதாவது பாதுகாப்பு குறைபாடு நேர்ந்து விட்டால் என்ன செய்வது என்ற அச்சம் கட்சியினருக்கு வந்துள்ளது.

தேஜஸ்விக்கு போகும் இடமெல்லாம் பெரும் கூட்டம் கூடி வருகிறது. இது பாஜக மற்றும் நிதீஷ் குமார் கட்சியினருக்கு பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளித்து வருகிறது. பாஜகவை விட நிதீஷ் குமார்தான் இந்த கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்.
இந்த நிலையில் இக்கூட்டமே தற்போது ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. தேஜஸ்விக்கு பிரச்சினை வந்து விடுமோ என்ற அச்சம் கட்சிக்கு வந்துள்ளது. இதனால் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு கேட்டு கட்சியின் ராஜ்யசபா எம்பி மனோஜ் குமார் ஜா, தேர்தல் ஆணையத்துக்கும், தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் சொல்லும்போது, "பலமுறை கோரிக்கை விடுத்தும்கூட தேஜஸ்வி யாதவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படாமல் இருக்கிறது.. இதனால் அவரது பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.. அவரது ஹெலிகாப்டரை பலர் முற்றுகையிடும் அளவுக்கு பாதுகாப்பு குளறுபடிகள் உள்ளன.. சமூக விரோதிகள் கட்சி தொண்டர்கள் என்ற பெயரில் புகுந்து கலகம் விளைவிக்கும் அபாயமும் உள்ளது. அதனால் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்" என்று ஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கடிதம் ஒன்றையும் அனுப்பி இருக்கிறார்.. சமீபத்தில் ஹெலிகாப்டரை முற்றுகையிட்ட கும்பலால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. தடுப்புகளை உடைத்துக் கொண்டு அவர்கள் உள்ளே புகுந்து ஹெலிபேடுக்குள் புகுந்து விட்டனர். ஹெலிபேட் சேதமடைந்தால் ஹெலிகாப்டர் இறங்கும்போது விபத்து நேரிட வாய்ப்புள்ளது என்பதால் ஆர்ஜேடி கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தேஜஸ்விக்கு உரிய பாதுகாப்பை தராமல் பீகார் போலீசார் மோசமாக நடந்து கொள்வதாகவும் ஆர்ஜேடி கட்சி புகார் கூறியுள்ளது. பீகாரில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது... முதல் கட்டத் தேர்தல் நேற்று நடந்தது!
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications